Chennai

News March 19, 2025

சென்னை வாழ் பேருந்து பயணிகளுக்கு GOOD NEWS!

image

சென்னையில் இதுநாள் வரையில் சாதாரண மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் பயணிக்க மட்டுமே பயண அட்டைகள் இருந்ததன. ஆனால் இப்போது AC பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் புதிய ‘விருப்பம்போல் பயணிக்கும் பயண அட்டையை’ மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பயண சலுகை அட்டையின் விலை ரூ.2000. பேருந்தில் பயணிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 19, 2025

சென்னையில் தீரா நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் முருகன்

image

சென்னை கே.கே நகரில் புகழ்பெற்ற ‘திருச்செந்தூர் முருகன் கோயில்’ உள்ளது. பொதுவாக திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் கே.கே நகரில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து திருச்செந்தூர் முருகனை வணங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால், தீராத நோய்களும் தீரும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News March 19, 2025

பேராசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள்

image

சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியைக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

News March 19, 2025

டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்

image

மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சிறந்த வாகனப் போக்குவரத்து மேலாண்மைக்காக, டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி பொது மற்றும் தனியார் பங்களிப்பு (Public Private Partnership) முறையில் அமைக்கப்படும். இதனால் வாகன நெரிசல்கள் குறைவதுடன் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

பெட்ரோல், டீசல் வாகனங்கள் படிப்படியாக மாற்றம்

image

இன்று சென்னை மாநகராட்சியின் நிதி நிலை அறிக்கை ரிப்பன் கட்டிட வளாகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசை குறைக்கும் வகையில் அவை அனைத்தும் படிப்படியாக இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

News March 19, 2025

நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் 

image

சென்னை பெருநகர மாநகராட்சி இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியருக்கு பயணப்படி மற்றும் உணவுப்படி வழங்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்படும் என புதிய அறிவிப்பு.

News March 19, 2025

மகப்பேறு மருத்துவமனைகளுக்கு கிருமி நாசினி புகைக்கருவிகள் 

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவ சேவைகள் துறையின் கீழ் இயங்கும் 16 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் என 19 மருத்துவமனைகளுக்கும் தலா ஒன்று வீதம் 19 கிருமிநாசினி புகைக்கருவிகள் (Fogger Machine) தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திடமிருந்து (TNMSC) கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 19, 2025

வளர்ப்பு பிராணிகளுக்காக மருத்துவமனை ஏற்படுத்தப்படும்

image

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மண்டலம் 1,2,3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய பத்து மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாடு மையங்களில் கூடுதலாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிகிச்சை வழங்க ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News March 19, 2025

சென்னை பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கூடுதலாக 681 கோடியாக உயர்வு

image

கடந்தாண்டு சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்தாண்டு 4464 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது, அந்த தொகை தற்போது 5145 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 681 கோடி ரூபாய் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயர்வு. கடந்தாண்டு 262 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை இந்த ஆண்டு 68 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

வருவாய்த் துறையில் க்யூ ஆர் கோட் வசதி

image

சென்னை வருவாய் துறையில் புதிதாக வரி செலுத்துபவர்களுக்கு QR code வசதி ஏற்படுத்தப்படும். சொத்துவரி மதிப்பீடு, பெயர் மாற்றம், திருத்தத்திற்கான இறுதி அறிவிப்புகள், புதிய மற்றும் புதுப்பிக்கும் தொழில் உரிமை, மக்கள் வழங்கும் அறிவிப்புகளுக்கு புதிதாக QR Code வசதி செய்யப்படும். இதனால் எவ்வித சிரமம் இன்று உடனடியாக வரிகளை செலுத்த இயலும்.

error: Content is protected !!