India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி ஆசை தம்பியின் தலையில் தலையில் கடப்பாரையால் அடித்து நேற்றிரவு மர்ம கும்பல் கொலை செய்தது. சென்னையி பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையில் தொடர்புடைய 5 ஆட்டோ ஓட்டுனர்கள் தற்போது கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அஞ்சல் அலுவலகத்தில் கொல்லர், தச்சர் உள்ளிட்ட 10 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் அலுவலகத்தில் நேரில் வரவேற்கப்படுகின்றன. 8,10-ஆம் வகுப்புடன் ஐ.டி.ஐ முடித்துள்ள, 18-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 19,900 முதல் 63,200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 30-ஆம் தேதியாகும். மேலதிக விவரங்களுக்கு இந்திய தபால் துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் மேற்கூரை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் பாழாய்ப் போவதாக சென்னையைச் சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 2025-ஆம் ஆண்டிற்கான பொங்கல் வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக விசைத்தறி தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணிநூல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.55.43 கோடி செலவிலான கட்டடங்களையும், மீன்வளத்துறை சார்பில் ரூ.125.09 கோடி செலவிலான கட்டடங்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 35 உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
நடிகை தமன்னா அட்டிகா கோல்டு, பவர் சோப் உள்ளிட்ட பிரபல தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து இருந்தார். இந்நிலையில் இந்நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தை மீறி விளம்பரங்களை ஒளிபரப்பு செய்ததாக கூறி நடிகை தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இரு தனித்தனி வழக்குகளாக எடுத்துக் கொள்ளப்பட்ட விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ர கலைஞர் நூற்றாண்டு விழாவில், கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கலந்து கொண்ட நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சத்தியமூர்த்திபவனில் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக செல்வப்பெருந்தகைக்கு வழங்கினார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் எண்.12840 ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயில் 20.08.24 (இன்று) மாலை 19.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று புறப்பட வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதமாக நாளை 21.08.24 காலை 05.00 மணிக்குப் புறப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் இதில் பயணிக்கவிருந்தால் அவர்களுக்கு ஷேர் செய்து தெரிவிக்கவும்.
கருணாநிதி உருவ படம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை அண்ணா அறிவாலயத்தில் 10,000 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நாணயம் கட்சித் தலைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நாணயத்தை வழங்கினார்கள்.
சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்தாக, ஐ.பெரியசாமி, ஜாபர்சேட் உள்ளிட்ட ஏழு பேர் மீது 2013 ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இதில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு, குற்றச்சாட்டு பதிவுக்காக ஆகஸ்ட் 27 தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.