India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் வந்த அந்த இளைஞர், பைக்கை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார், இளைஞர் உடலை கைப்பற்றி, அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சேவல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் – லட்சுமி தம்பதியினர். நேற்று, இருவரும் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருவேற்காடு சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுரவாயல் பறக்கும் பாலத்திற்காக சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த கனரக கண்டைனர் லாரி இவர்கள் மீது ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 26) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.38க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.80க்கும், உருளைக்கிழங்கு ரூ.30, ரூ.45க்கும், பீன்ஸ் ரூ.60 – ரூ.70க்கும், சவ்சவ் மற்றும் முட்டைக்கோஸ் ரூ.25 – ரூ.30க்கும், முள்ளங்கி ரூ.20 – ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் அலுவலகத்தில், முன்னாள் தர்மபுரி எம்.எல்.ஏ.வும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளருமான ஆர்.சின்னசாமி இ.பி.எஸ். தலைமையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், தற்போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணை சத்யா நகரில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. 2 வெவ்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில், யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பாலமுரளி என்பவரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாலமுரளி மீது ஏற்கெனவே 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் அலுவலகத்தில், முன்னாள் தர்மபுரி எம்.எல்.ஏ.வும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளருமான ஆர்.சின்னசாமி இ.பி.எஸ். தலைமையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர், தற்போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் (ஜூலை 27) மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, அம்பத்தூர், சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், பொன்னியம்மன் நகர், அண்ணா நகர், பாரதி புரம், ஷெனாய் நகர், அடையாறு, பெசன்ட் நகர், ஒடைகுப்பம், திடிர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்த பிறகு மின் விநியோகம் வழங்கப்படும்.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியை முன்னாள் பாஜக எம்எல்ஏவும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளருமான ஆர்.சின்னசாமி நேற்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது, பாஜகவில் இருந்து விலகிய அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின், தலைமைக் கழகச் செயலாளர்கள் உடனிருந்தனர்.
சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு தலைமை துணை தூதர் டக்காஹாஷி முனியோ நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். அவரை, ஆளுநர் பொன்னாடை போர்த்தி வரவேற்று நினைவு பரிசு வழங்கினார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின் போது சக தூதரக அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னையில் கேட்பாரற்று பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றி ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 கேட்பாரற்ற வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் ஏதேனும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க போலீசாரின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.