Chennai

News August 21, 2024

தமிழ்நாடு மின்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இந்த போராட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

News August 21, 2024

சென்னை பல்கலை., தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள்

image

சென்னை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலமும் வழங்கி வருகிறது.‌ இந்த தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2024

சென்னையில் போக்குவரத்து காவலர்களுக்கு கழிப்பிட வசதி

image

சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்களுக்கு நூறு இடங்களில் கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் 55 காவல் நிலையங்கள் உள்ளன மொத்தம் 284 சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் கழிவறை வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். கமிஷனர் சுதாகர் நடவடிக்கையால் சாகா நிறுவனம் கழிப்பறைகளை கட்டி வருகிறது.

News August 21, 2024

சென்னை முதலீட்டு மாநாட்டில் சிஇஓ சந்தானம் பேட்டி

image

சென்னையில் நடைபெற்று வரும் முதலீட்டு மாநாட்டில் பத்திரிக்கையாளை சந்தித்த SAINT-GOBAIN நிறுவன CEO சந்தானம், “24 வருடங்களுக்கு முன்பு ரூ.525 கோடி முதலீடு செய்ய தமிழ்நாட்டுக்கு வந்தோம். இதுவரைக்கும் ரூ.5,000 கோடி முதலீடு செய்திருக்கிறோம். 6,000 பேருக்கு மேல வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறோம்”என தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்வதற்கான காரணங்களை பட்டியலிட்டார்.

News August 21, 2024

சென்னை மெட்ரோ 4,5-வது வழித்தடத்திற்கான திட்ட அறிக்கை

image

மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் 4 மற்றும் 5-ஆவது வழித்தடங்களை நீடிப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4-ஆவது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும், மாதாவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தை ஆவடி வரை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

News August 21, 2024

முதலீடுகளை ஈர்க்கும் முன்னணி மாநிலம் தமிழ்நாடு

image

சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்திற்கு இதுவரை வரலாறு காணாத மகத்தான வளர்ச்சியடைந்துள்ளதாகவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை கொண்டு போய் சேர்க்க முதலமைச்சர் பாடுப்பட்டு வருவதாகவும் இதனால், முதலீடுகளை ஈர்க்கும் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கி உள்ளது” என்றார்.

News August 21, 2024

சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் 1315 வாகனங்கள்

image

சென்னையின் உட்புற சாலைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சாலையோரம் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இதோடு சேர்த்து, முதற்கட்டமாக 1315 வாகனங்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டு, அவையும் அகற்றப்பட்டு வருகின்றன.

News August 21, 2024

இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல் ஆணையரிடம்புகார்

image

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான்‌ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் புத்த மதத்தை உயர்த்தி காட்டுவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய அக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

News August 21, 2024

பள்ளிகளை ஆய்வு செய்யாத அதிகாரிகளுக்கு மெமோ

image

சென்னை பள்ளிக்கல்வி ஆணையரங்கத்தில், ஒரு மாதத்திற்கு 20 பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 பள்ளிகள், 6 பள்ளிகளை ஆய்வு செய்து, உத்தரவை பின்பற்றாத 350 வட்டார கல்வி அலுவலர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. இதன் பெயரில் தொடக்கக் கல்வி துறையின் புதிய இயக்குனர் நரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

News August 21, 2024

நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்கு ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உண்மையில்லாத பல பொய்களை கூறி, தரக்குறைவாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி, நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது, குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!