Chennai

News August 22, 2024

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை

image

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று மணலி சாத்தங்காடு, எம்ஜிஆர் நகர், விமலாபுரம், சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம், டி.கே.பி நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், எடப்பாளையம், கணபதி நகர், மணலி பகுதி, அம்பத்தூர் வெள்ளாளர் தெரு, குளக்கரை தெரு 1, 2 – வது பிரிவு உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.

News August 22, 2024

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் ரயில் சேவையில் மாற்றம்

image

அரக்கோணம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இன்று மற்றும் நாளை மறுநாள் (ஆக.22, 24) ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், 2 நாட்களிலும் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

News August 22, 2024

தெலுங்கானா குற்றவாளி சென்னையில் கைது

image

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த பயணி ஒருவரை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அவர், தெலுங்கானாவைச் சேர்ந்த சந்தீப் குமார்(30) என்பதும், 2016 ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பதும் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த விமான நிலைய அதிகாரிகள் தெலுங்கானா போலீசிடம் ஒப்படைத்தனர்.

News August 21, 2024

தமிழகத்தின் 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம்

image

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை” என தெரிவித்தார்.

News August 21, 2024

செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு

image

வனவிலங்கு ஆர்வலர்களின் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2023-ம் ஆண்டு யானைகள் உயிரிழப்பு தொடர்பாக முடித்து வைத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. மின்வேலி, மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு குறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

News August 21, 2024

சென்னையில் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி

image

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்து போராட்டம் நடத்த இந்து முன்னணி அனுமதி கோரப்பட்டது. வங்கதேசத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என காவல்துறை தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து முன்னணி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆக.27-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

News August 21, 2024

தவெக தலைவர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து

image

சென்னையில் கல்வெட்டு திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “அக்டோபர் 2-ஆம் தேதி விசிக சார்பாக மகளிர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசிக – திமுகவுடன் தேச நலனுக்காகவே கூட்டணியில் இணைந்து செயல்படுவகிறது, விசிக நலனுக்காக அல்ல என கூறினார். மேலும், நாளை விஜய்யின் தவெக கொடி அறிமுக விழா நடைபெறவுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

News August 21, 2024

அரசு பொது நிறுவன பயன்பாட்டில் பாகுபாடு கூடாது

image

கல்விக்கூடங்கள், மயானங்கள் உட்பட அரசு பொது நிறுவனங்களை பயன்படுத்துவதில் பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் புதிதாக கட்டப்படும் அரசு அலுவலகங்களும் அனைத்து மக்களுக்கும் உரியது என குறிப்பிட்டது.

News August 21, 2024

பல்வேறு சைபர் குற்ற வகைகள் வெளியிடு

image

சென்னை பெருநகர காவல் துறை, பல்வேறு வகையான சைபர் குற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் துறை பல்வேறு வகையான சைபர் குற்றங்களை வெளியிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் ஹேக்கிங், வலை கடத்தல், சைபர் ஸ்டாக்கிங், பிஷிங் போன்ற சைபர் குற்ற வகைகளை வெளியிட்டுள்ளது. மேலும் தேசிய சைபர் கிரைம் உதவி 1930 எண்களை வெளியிட்டுள்ளது.

News August 21, 2024

முன்னாள் டிஜிபி மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து

image

கடந்த 2006-2011, ல் திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட்டிற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!