India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. மகப்பேறுக்காக சொந்த ஊர் வந்த ஆந்திராவைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கு விமானத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவக்குழுவை தயாராக வைத்திருக்குமாறு விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அறிவுறுத்தினார். சென்னையில் தரையிறங்கும் முன்பே விமானத்திலேயே கிருத்திகா குழந்தையை பெற்றெடுத்தார்.
சிறுவனின் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. வேளச்சேரியை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சிறுவனின் சிகிச்சை தொடர்பாக 7 நாட்களுக்குள் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். புதூர் அப்பு என்பவரின் கூட்டாளியான ராஜேஷ், சம்போ செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரோடு தொடர்பில் இருந்த கோபி, குமரன் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிண்டி – ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஆக.23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்து பங்கேற்கலாம் என சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் தொடங்குகிறது. சர்வதேச டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 8ஆவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரானது செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றி களமிறங்குகின்றன. இந்த சீசனில் ஜெய்ப்பூர், அகமதாபாத் இரு அணிகள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
கிண்டி – ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறும். மேலும் தகவலுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே கூறினார்.
சென்னை மாநகராட்சியில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அடைப்புள்ள 24 இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி நேற்று அறிவித்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள மில்லர்ஸ் சாலை, பர்னபி சாலை, திருமங்கலம் 100அடி சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை உள்ளிட்ட 24 இடங்களில் மெட்ரோ பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. எனவே மக்கள் பாதுகாப்புக்காக செல்ல வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் 158ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75க்கும். ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தன்னிடம் வருபவர்களையெல்லாம் வாரி அணைத்து, வாழ வைக்கும் இடம் சென்னை. பல்வேறு கலாசார பெருமைகள், மொழி, பழமையான நகரம் என பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கிறது நம்ம சென்னை. பிழைப்பு தேடி சென்னை வந்தவர்களுக்கு சென்னை என்பது ஒரு ஊரின் பெயராக இல்லாமல் அவர்களின் உணர்விலும், வாழ்விலும் கலந்து விட்ட ஒன்று. 385ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வரும் சென்னையின் பெருமையை பரப்புவோம்.
Sorry, no posts matched your criteria.