India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக அண்மையில் பதவி உயர்வுப் பெற்ற முருகானந்தம் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் இடையே சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். “தனது நேர்மையான பெரும் உழைப்பால் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த தலைமை பீடத்தை எட்டியுள்ள பேராளுமை முருகானந்தம் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்தார்.
ஆயிரம் விளக்கு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் தகவல் தொடர்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், விரோதமாக பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள் மற்றும் கணினி உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செல்போன் சிம் கார்டுகளை சிம் பாக்ஸ்களில் பயன்படுத்தி சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி லாபம் பெற்று வந்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஆளுநரை சந்திப்பது மரபு. இதில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
சென்னை தினத்தை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற “சென்னை வாசிக்கிறது” நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் உயிர் மூச்சாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையின் பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் சென்னை குறித்து பல எழுத்தாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நூலான “எனக்கும் ஊர் சென்னைதான்” எனும் புத்தகத்தையும் இவ்விழாவில் வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை தினத்தை முன்னிட்டு மிளிரும் தமிழ்நாடு என்னும் தலைப்பின் டு மெட்ராஸ்” என்ற புகைப்படங்களுடன் கூடிய நூலை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் மதுமதி மற்றும் அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
சென்னையைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் கனிஷ் இந்தாண்டு நடைபெற்ற Puzzle Cubes-ல் உலக கின்னஸ் படைத்துள்ளார். இந்நிலையில் இந்த சாதனை படைத்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து சாதனைக்கான சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் இந்த நிகழ்வில் அவரது பெற்றோர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
சென்னையின் தெற்குப் பகுதி நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மற்றொரு உள்கட்டமைப்பை மாநில நெடுஞ்சாலை மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாடு இசைக் கல்லூரி வழியாக கிரீன்வேஸ் சாலையை துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும் வகையில், புதிய இணைப்புச் சாலையை அமைக்கப்படவுள்ளது. சுமார் ரூ.37.86 கோடியில் இந்த இணைப்புச் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை தினம் ஆகஸ்ட் 22-ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை ‘385’ வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த மாநகரமாக மாற்றியுள்ள நாம், இந்தியாவின் முதன்மை நகரமாக மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்” என கூறி, வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
திருமூர்த்தி மலையில் இருந்து குருமலைக்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைப்பதற்கு தடை கோரி திருப்பூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மத்திய – மாநில அரசுகள் இதுகுறித்து, மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. புதிய சாலை அமைத்தால், விலங்குகள் வேட்டையாடப்படவும், மரங்கள் வெட்டி கடத்தவும் வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது, “பெண்கள் கடந்த காலத்தில் வீட்டு படிக்கட்டை கூட தாண்ட கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். உங்களை மாணவிகளாக பார்க்கவில்லை, திராவிட அரசின் புதுமை பெண்களாக பார்க்கிறேன்” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.