Chennai

News August 22, 2024

இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்

image

தமிழக வெற்றி கழகத்தின் கொடி இன்று கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்த நிலையில், காலை முதலே பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியினை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில், கட்சி நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் ‘தமிழக வெற்றி கழகம்’ என வசனங்களுடன் கொடியினை ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக சென்னை எழும்பூரில் நிர்வாகிகள் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

News August 22, 2024

முதல்வரை சந்தித்த தாய்லாந்து துணை தூதர்

image

தமிழ்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டு துணைத் தூதர் ரச்சா அரிபார்க் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தாய்லாந்து வர்த்தக மையத்தின் இயக்குநர் ஜினாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News August 22, 2024

10 நிமிடங்களுக்கு ஒரு இணைப்பு வாகனம்

image

மெட்ரோ பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு இணைப்பு வாகன வசதியை கொண்டுவர தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பயணிகள் கூட்டம் இல்லை என்றாலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அவ்வாகனம் இயக்க வேண்டும். இதனால் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பு குறித்து ஆலோசித்து வருவதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 22, 2024

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

image

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இதில், விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News August 22, 2024

சென்னை தினத்தில் ஜொலிக்கும் மாநகரம்

image

இன்றைய சென்னை மாநகருக்கு 1996ம் ஆண்டுக்கு முன்பு வரையிலான பெயர் மெட்ராஸ் என்பதாகத்தான் இருந்தது. 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், இதே ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்ட இந்நகரம், இன்று தனது 385வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இன்றைய தினத்தில், சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி, மாரத்தான் போட்டிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

News August 22, 2024

போதுமான வருமானம் இல்லை என குற்றச்சாட்டு

image

கூட்டுறவுத்துறையின் கூட்டுறவு மருந்தகங்களில் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இங்கு 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்கப்படுவதால், மக்களிடையே வரவேற்பு உள்ளது. ஆனால், மருந்தாளுனர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக 11,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், பிடித்தம் போக 9,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால் போதுமான வருவாய் இல்லை என மருந்தாளுநர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 22, 2024

கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாடும்செல்வப்பெருந்தகை

image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்களுடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துரையாட உள்ளார். தாம்பரம் கிருஷ்ணா நகர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, சமபந்தி உணவு அருந்தவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

News August 22, 2024

தமிழகத்தில் 4 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் பணியாற்றக்கூடிய நான்கு உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜுவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நடைபெற்ற செம்பியம் காவல் நிலையத்திற்கு புதிய உதவி ஆணையரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் சென்னை செம்பியம் காவல் நிலைய உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News August 22, 2024

சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

image

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 50% பேருந்துகளுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இதன் மூலம், பராமரிப்பு, எரிபொருள் உள்ளிட்ட செலவுகள் ஈடுசெய்யப்படும். மேலும், மாநகர போக்குவரத்து கழகத்தின் உட்கட்டமைப்புகளுக்கு ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News August 22, 2024

சென்னையில் காங்கிரஸ் போராட்டம்

image

சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தப்பட்டது.

error: Content is protected !!