India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யா என்ற பெண், நேற்று முன்தினம் புற்றுநோயால் உயிரிழந்தார். கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, இ.பி.எஸ்., அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 13.58 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். அதில், 2.79 லட்சம் கட்டடங்களில் வரி மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், 2.79 லட்சம் கட்டடங்களில் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறு மதிப்பீடு பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் முடியும்போது கூடுதலாக, 120 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அம்பத்தூர், பொன்னியம்மன் நகர், சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், ஜல்லடியான் பேட்டை, மேடவாக்கம், சாஸ்தா நகர், சித்தாலப்பாக்கம், வீர பத்ரன் நகர், அடையாறு, இந்திரா நகர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். 2 மணிக்கு மேல் மின் விநியோகம் வழங்கப்படும்.
சென்னை எம்ஜிஆர் நகரில் நகைக்காக மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கணவன் மனைவி சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மூதாட்டி விஜயா என்பவரை பார்த்திபன் சங்கீதா தம்பதிகள் கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி இருச்சக்கர வாகனத்தில் எடுத்து சென்று கூவத்தில் வீசியுள்ளனர். மூதாட்டியை காணவில்லை என அவரது மகள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியை சோதனை செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரங்களாக தமிழ்நாடு அரசு சார்பாக நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, ராயபுரம் மண்டலம் எழும்பூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் அமையவுள்ள மீட்பு மையத்தினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்திற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை பாஜக சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. சென்னையில் தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான விளக்க கூட்டம் நடைபெற்றதை ஒட்டி அதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வருகை தந்தார்.
சென்னை, தமிழ்நாடு அதி தீவிரப்படை, கமாண்டோ படை, தேசிய பாதுகாப்புப் படையுடன் ஒருங்கிணைந்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கு பயிற்சி மற்றும் அதன் நடைமுறைகளை பற்றி அறியவும், தேசிய மற்றும் மாநில அரசுத்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அம்பத்தூர் பால்பண்ணையில் நேற்று முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 20 நாட்கள் நடைபெறவுள்ளதால், பால் உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் பாடலூரில் உள்ள மற்ற பால் பண்ணைகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கட்டுமான பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ரூ.39.73 கோடி மதிப்பில் யானைக்கவுனி பாலத்தின் இறுதி கட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையர்கள் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார். பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சிஐடியு தமிழ்நாடு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் இன்று (27/07/24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும், இந்த சந்திப்பில் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் கலந்துரையாடினர். இதில், காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.