Chennai

News August 23, 2024

சென்னையில் புதிதாக மாற்றப்பட்ட டி.எஸ்.பி-க்கள்

image

தமிழகத்தில் 20 டி.எஸ்.பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய துணை காவல் கண்காணிப்பாளராக புதுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ராகவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னையில் சமூக நலன் காவல் புதிய உதவி ஆணையராக பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் வளவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News August 23, 2024

வில்லிவாக்கம் கடல்பாசி பூங்காவை பாதுகாக்க மாநகராட்சி கோரிக்கை

image

வில்லிவாக்கத்தில் உள்ள கடற்பாசி பூங்காக்கள், மழைத்தோட்டம் அல்லது உயிரித் தக்கவைப்பு பகுதி என்றும் அழைக்கப்படுகின்றன. மழைநீரை உறிஞ்சி வடிகட்டுவதன் மூலம் மழைநீரை நிர்வகிப்பதுடன், உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கிறது. எனவே இந்த கடல்பாசி பூங்காவை சிறந்த முறையில் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

News August 23, 2024

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

image

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒற்றை உறுப்பினருடன் ஆணையம் செயல்பட அனுமதிக்கும் சட்டப்பிரிவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விமல்மேனன் என்பவர் வழக்கு தொர்ந்தார். இந்த வழக்கில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மந்தபட்ட மனு மீது மத்திய, மாநில அரசுகள், நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

News August 23, 2024

சென்னை மக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்

image

பெருநகர சென்னை மாநகராட்சி, மக்களின் பொது நலன்களை கருத்தில் கொண்டு கொசுக்களால் ஏற்படும் நோய்களின் அறிகுறிகளை வெளியிட்டுள்ளது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் மருத்துவர்களை அணுகி நலன் பெறுமாறு சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

தமிழக சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

image

தேனி, தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 95 கிளைச்சிறைகள் உட்பட 102 சிறைகளில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 3 ஆண்டு அனுபவம் கொண்ட நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்கலாம். சிறைத்துறை, இணையதள <>லிங்கில் <<>>விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 23, 2024

சுழற்கோப்பையை வழங்கிய அமைச்சர்

image

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பை இன்று வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சட்டமன்றப் பேரவைச் செயலக அரசு முதன்மைச் செயலாளர் கி. சீனிவாசனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News August 23, 2024

ஆவினில் பால் தட்டுப்பாடு இடமில்லை: மனோ தங்கராஜ்

image

சென்னை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பால்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான பால் கையிருப்பில் உள்ளது. இந்த ஆண்டு ஆவினில் பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த ஆண்டை விட 10 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இந்த ஆண்டு கொள்முதல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

News August 23, 2024

மேயர் பிரியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

image

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புர சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜெனிஃபர் ஆர்.லிட்டில் ஜான் மற்றும் சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News August 23, 2024

சென்னை தி. நகர் தீவிபத்தில் இருவர் உயிரிழப்பு

image

சென்னை தி.நகரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன் இருவர் உயிரிழந்துள்ளனர். இருவரும் வீட்டில் இருந்த போது பெரும் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தாய் ராஜலட்சுமி(55), மகன் கிஷோர் குமார்(26) இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News August 23, 2024

சென்னை அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

தாழம்பூரில் உள்ள PSBB என்ற தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கு Boms present in class room, ஜாபர் சாதிக் மெத் இஸ்யூ என்ற வாசகம் அடங்கிய மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, பள்ளி முதல்வர் ருக்மணி புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த மாதம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!