Chennai

News July 29, 2024

கொலை சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில் இல்லை: அமைச்சர்

image

சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, “தமிழகம் கொலை மாநிலம் அல்ல, கலை மற்றும் அறிவுசார் மாநிலம். சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம்.
ஆட்சியுடன் தொடர்புடைய கொலைச் சம்பவங்கள் எதுவும் தமிழகத்தில்  நடைபெறவில்லை, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது” என கூறினார்.

News July 29, 2024

ஆம்ஸ்ட்ராங்க கொலை: 20 பேரின் சொத்துகள் முடக்கம்?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 20 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. BSP கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், இதுவரை 20 பேர் கைதாகியுள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம், கொலைக்கு தரப்பட்ட பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 29, 2024

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூக்களின் விலை

image

சென்னை கோயம்பேடு பூ சந்தையில், ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 2 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.2000, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140 ரூ.140, சாக்லேட் ரோஜா ரூ.180 விற்பனை செய்யப்படுகிறது. வரத்துக் குறைவு காரணமாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது.

News July 29, 2024

போராட வரும் ஆசிரியர்கள் கைது

image

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 31 அம்ச கோரிக்கைளை வலுயுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க குவிந்தனர். அப்போது, ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

News July 29, 2024

கம்யூனிஸ்ட் நிர்வாகியின் உடல் தானம்

image

அம்பத்தூர், ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் லெனின் சுந்தர் (55), கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், வடசென்னை சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆவார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது குடும்பத்தினர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானம் செய்ய முடிவெடுத்தனர். இந்நிலையில், நேற்று (ஜூலை 28) அவரது உடல் தானம் செய்யப்பட்டது.

News July 29, 2024

மனிதர்கள் கழிவுநீர் அகற்றினால் புகார் அளிக்கலாம்

image

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் கட்டணமில்லா தேசிய உதவி எண் 14420-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவுறுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கடலூரில் தொழிலாளர்கள் சாக்கடைகளில் மூழ்கி சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்படத்தக்கது. ஷேர் பண்ணுங்க.

News July 29, 2024

கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கொட்டிவாக்கம் சுவாமி நாதன் நகரைச் சேர்ந்தவர் பழனி (44). இவர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கோயில் கோபுரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 29, 2024

கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம்

image

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 29) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.36க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.80க்கும், தக்காளி ரூ.20 – ரூ.30க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.50க்கும், சவ் சவ் ரூ.25 – ரூ.28க்கும், முள்ளங்கி, முட்டைக்கோஸ் ரூ.20 – ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும், இஞ்சி ரூ.125 – ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News July 29, 2024

குறுஞ்செய்தியை நம்பவேண்டாம் என அறிவுறுத்தல்

image

கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என செல்போன் எண்ணுக்கு வரும் குறுஞ்செய்திகளை பொருபடுத்த வேண்டாம் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. முதலில் தங்களின் கட்டண நிலையினை மின்வாரிய வலைதளம் அல்லது செயலியில் சரிபார்த்துக்கொள் என்று வரும் குறுஞ்செய்தியின் எண்ணை அழைக்கவோ அல்லது அதற்கு பணம் செலுத்தவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வந்தால் சைபர் குற்ற எண் 1930-ஐ அழைக்கவும்.

News July 29, 2024

சென்னையில் நாளை மின்தடை

image

சென்னையில் நாளை (ஜூலை 30) பல்வேறு இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தி.நகர், நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், திருமூர்த்தி நகர், அடையாறு, இந்திரா நகர், வேளச்சேரி, போரூர், குமணன் சாவடி, மதுரவாயல், வானகரம், சேத்துப்பட்டு, ஆர்.வி நகர், ஷெனாய் நகர், கீழ்ப்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!