Chennai

News August 25, 2024

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ பணி காரணமாக, சென்னையில் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மவுண்ட் பூந்தமல்லி ரோடு புஹாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லத் தடை இல்லை. போரூரில் இருந்து கத்திபாராவுக்கு பெல் ராணுவ சாலை சந்திப்பு மவுண்ட் பூந்தமல்லி சாலையில் செல்லத் தடை. SHARE

News August 25, 2024

சென்னையில் வேலை வாய்ப்பு; மாநகராட்சி அழைப்பு

image

சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்த அடிப்படையில் 30 மருத்துவ அதிகாரி; 32 செவிலியர்; 12 பல்நோக்கு சுகாதார பணியாளர்; 66 சுகாதார உதவியாளர்; 5 உளவியலாளர்; 5 சமுதாய பணியாளர் என, 150 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 6ம் தேதிக்குள் ரிப்பன் மாளிகைக்கு அனுப்ப வேண்டும்

News August 25, 2024

சென்னை : நடிகர் ரஜினிக்கு பதிலளித்த முதலமைச்சர்

image

சென்னையில் கலைஞர் தாய் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் ரஜினிகாந்த் முதலமைச்சருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதற்கு முதலமைச்சர் என்னை விட ரஜினிகாந்த் வயதில் மூத்தவர் தான், எனக்கு அவர் சில அறிவுரைகள் வழங்கினார் அதனை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம் எதிலும் நான் தவறிட மாட்டேன் என பதில்  கொடுத்தார்.

News August 25, 2024

புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் பேச்சு 

image

நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு :- கலைஞர் எனக்கு தந்தை மட்டுமல்லாமல் தாயும் அவர் தான். எனக்கு மட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் தாய் தந்தையாக விளங்கினார். இந்திய வரைபடத்தில் இல்லாத ஒருவருக்கு, இந்தியாவே ஒரு நினைவு நாணையம் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடத்தை செதுக்கியவரும் வேலு தான். எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடிய திறமை ஏ.வ. வேலுக்கு உள்ளது.

News August 24, 2024

சென்னையில் புதிதாக 4 சேமிப்பு கிடங்குகள்

image

சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் துறைமுகத்தில் காலியாக உள்ள 18,000 சதுர மீட்டர் பகுதியை கண்டறிந்து, 4 இடங்களாக பிரித்து தலா 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் 60 கோடி ரூபாய் செலவில் கிடங்குகளை அமைக்க உள்ளோம். இதற்கான ‘டெண்டர்’ வெளியிட்டு நிறுவனம் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. அதுபோல், ஏற்கனவே உள்ள 68,000 சதுர மீட்டர் பரப்பு கிடங்கு பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்

News August 24, 2024

“ஆன்மீக நோக்கமா? ஓட்டு வங்கிக்கின் நோக்கமா?”

image

பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அளித்துள்ள பேட்டியில், “கடவுளே இல்லை என்று கூறியவர்கள் இன்று முருகனுக்கு மாநாடு நடத்துவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இது பாஜகவின் கொள்கை சிந்தனை தமிழகத்தில் வேரூன்றி வருவதற்கு சிறந்த உதாரணம். இந்த முருகன் மாநாடு ஆன்மீக நோக்கமா? ஓட்டு வங்கிக்கின் நோக்கமா? என கேள்வி எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

கிக் பாக்ஸிங் போட்டியில் தங்கம் வென்று அசத்திய சென்னை வீரர்கள்

image

புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணி சார்பாக மாதவரம் டீச்சர்ஸ் காலனியில் உள்ள Spitfire Kickboxing Academy சார்பில் வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 7 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் நேரில் அழைத்து வாழ்த்தினார்.

News August 24, 2024

கேப்டன் முகம் டேட்டூ போட்டுக் கொண்ட தொண்டர்கள்

image

சென்னை தேமுதிக அலுவலகத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் உருவத்தை டாட்டூ போடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை, பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தேமுதிக தொண்டர்கள் 71 பேர், தங்கள் கையில் விஜயகாந்தின் முகத்தை ‘டாட்டூ’ வாக போட்டுக்கொண்னர். இதில், தேமுதிக திரளான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News August 24, 2024

முக்கிய குற்றவாளியின் புகைப்படம் சிக்கியது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் புதிய சில புகைப்படங்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, 2020ஆம் ஆண்டு வரை இவரிடம் சம்போ செந்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் மேலும் சில புகைப்படத்தை போலீசார் பெற்றதால், போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

News August 24, 2024

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் கைது

image

சென்னை புளியந்தோப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் ரவி போக்சோவில் கைது செய்யப்பட்டார். வடசென்னை மாவட்ட அரசு குழந்தைகள் நல அலுவலர் தந்த புகாரின் பேரில், போலீசார் ரவியை இன்று காலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவி, புதுச்சேரி மாநில புரட்சி பாரதத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!