Chennai

News August 26, 2024

உதயநிதி சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைப்பார்

image

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு :- அனைத்து கல்லூரியில் தமிழ் வழி கல்வியை கொண்டு வந்தவர் கலைஞர். எல்லோருக்கும் வழிகாட்டியாக இருப்பார் நம் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி விக்கிரவாண்டி இடைதேர்தலில் மட்டும் வெற்றி பெற வைக்கவில்லை ஒரே ஒரு செங்கலை வைத்து 40 தொகுதியிலும் வெற்றி பெற வைத்தவர். 2026 தேர்தலில் 234 தொகுதியிலும் வெற்றி பெற வைக்க போகிறார் என்றார்.

News August 25, 2024

வண்ண மீன் வர்த்தக மையம்; முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி காலனியில் நாளை காலை 10.00 மணியளவில்
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையம், இராயபுரம் மூலக்கொத்தளத்தில் புதிய சமுதாய நலக்கூடம் ஆகியவற்றிற்கு  அடிக்கல் நாட்டுகிறார்

News August 25, 2024

சென்னையில் பிரேமலதா வைத்த கடும் குற்றச்சாட்டு 

image

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை மேம்படுத்த வேண்டும். இதுதான் விஜயகாந்தின் கனவு என்றார்.   தமிழகம் மிகவும் ஒரு மோசமான நிலையில் உள்ளது. கஞ்சா ஊழல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது என கூறினார்.

News August 25, 2024

அண்ணா பல்கலைக்கழக கட்டணம் உயர்வு?

image

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இளநிலை, முதுகலை பொறியியல் பட்ட படிப்பிற்கு சான்றிதழ் பெறுவதற்கு ரூ.1000 லி ரு.1500 ஆக அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதிப்பெண் சான்றிதழ் மதிப்பெண் பட்டியலை டிஜி லாக்கரில் பதிவு செய்ய 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்

News August 25, 2024

50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணி ஆணை

image

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு , 411 பேர் கருணை அடிப்படையில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

News August 25, 2024

தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம் 2/2

image

சென்னை கடற்கரையில் இன்றிரவு 10.40 மணிக்கு, நாளை அதிகாலை 3.55 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் மின்சார ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. சென்னை கடற்கரையிலிருந்து இன்றிரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரத்திற்கு புறப்படும் ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியளவில் ரத்து. இந்த ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். ஷேர் பண்ணுங்க.

News August 25, 2024

தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம் 1/2

image

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டிலிருந்து இன்றிரவு 8.45, 9.10, 10.10, 11 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து. திருமால்பூரிலிருந்து இன்றிரவு 8 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் – சென்னை கடற்கரை இடையே பகுதியளவில் ரத்து.

News August 25, 2024

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு 

image

பெருநகர சென்னை மக்களே 2024-25 ஆம் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து செப்டம்பர் 30-க்குள் தவறாமல் செலுத்தி, 5% ஊக்கத்தொகையினை பெறுங்கள்.
chennaicorporation.gov.in/gcc/online-ser… இதற்கான லிங்கை சென்னை மாநகராட்சி தனது தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக பதிவிட்டுள்ளது.

News August 25, 2024

சென்னையில் வேலை: மாநகராட்சி அழைப்பு

image

சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தில், ஒப்பந்த அடிப்படையில் 30 மருத்துவ அதிகாரி, 32 செவிலியர், 12 பல்நோக்கு சுகாதார பணியாளர், 66 சுகாதார உதவியாளர், 5 உளவியலாளர், 5 சமுதாய பணியாளர் என மொத்தம் 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை, <>chennaicorporation.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, செப்.6ஆம் தேதிக்குள் ரிப்பன் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். SHARE NOW

News August 25, 2024

மெட்ரோ ரயில் பணியால் போக்குவரத்து மாற்றம்

image

மெட்ரோ ரயில் பணி காரணமாக மவுண்ட் பூந்தமல்லி ரோடு புகாரி ஹோட்டல் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை இன்றுமுதல் 27ஆம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.அதன்படி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். போரூரில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரும் வாகனங்களுக்கு மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!