India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களை தேடி மருத்துவ பணியாளா்கள் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் இன்று (ஜூலை 30) காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், தங்களுக்கு அடிப்படை சம்பளம் வழங்கி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் பணியாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகம் முன்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சேர்ந்த ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தபோது ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2ஆவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த ஆசிரியர்களை கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 390 அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் 23,848 பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற 7 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், இன்று மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும், மீண்டும் அதே மாடு பிடிக்கப்பட்டால் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். மேலும், 3ஆம் நாளில் இருந்து பராமரிப்பு செலவாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்படும் என தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிகளை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், மாமன்ற கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு இரங்கல் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கோயம்பேடு பூ சந்தையில் ஆடி மாதத்தை முன்னிட்டு, கடந்த 2 வாரங்களாக பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று ரோஜா பூ ரூ.150, மல்லி ரூ.700, சாமந்தி பூ ரூ.300, சம்பங்கி பூ ரூ.250, கனகாம்பரம் ரூ.1800, முல்லை ரூ.600, அரளி பூ ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.140 சாக்லேட் ரோஜா ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், அம்மா உணவகங்களுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களின் தரமும் உயர்த்தப்படவுள்ளன.
சென்னையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மாநகராட்சி சார்பில் எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் வளாக கட்டட கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், சென்னையில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த விதிக்கப்படும் அபராதம் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வசூலிக்க தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்தது. ஆனால், இன்று தக்காளி ரூ.35க்கும், கேரட் ரூ.100க்கும், வெங்காயம் ரூ.30க்கும், உருளைகிழங்கு ரூ.40க்கும், சின்ன வெங்காயம் ரூ.45க்கும், எலுமிச்சை பழம் ரூ.120க்கும் என அனைத்து காய்கறி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒவ்வொரு காய்கறிகளின் விலை 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
சென்னையில் ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள், நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய இ.பி.எஸ்., விளம்பர வசனம் மட்டும் பேசும் திமுக அரசு, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் செயலற்ற ஆட்சியாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம். போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.