India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடசென்னை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி எனக் கூறி விட்டு போராட்டம் நடத்தியதாக, இந்நிகழ்வில் தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் 160 பேர் மீது சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடியதாக, இரண்டு பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பெருங்குடி பகுதியில் இன்று 51 அடி உயரமுள்ள கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் புஷ்பி ஆனந்த். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 885 பேர் கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 23 குற்றவாளிகள் கடந்த 19 – ந் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு வார காலத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ. வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாறுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இழுவை கட்டணம் தராததால் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டால்பின் நம்பர்-1 கப்பலை காரைக்காலில் இருந்து விசாகப்பட்டினம் இழுத்து வருவதற்காக ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் தரவேண்டிய தொகை ரூ.35 லட்சத்தை தரவில்லை என் ஆதித்யா மரைன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சரக்கு கப்பலை சிறை பிடிப்பதுடன் செப்டம்பர் 2-ம் தேதி குறிப்பிட்ட நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அடுத்தகட்டமாக, மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் — பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் – சோழிங்கநல்லுார் என மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் தேர்வு செய்யப்பட்ட 56 இடங்களில் இரும்பு பாலம் அமைக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் மேம்பாலம், குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலம், சிட்லப்பாக்கம் மேம்பாலம் என மூன்று மேம்பாலங்கள் இடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மேற்கொள்ளப்பட மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பாலங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், பல்லாவரம் மேம்பாலம் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.
முதல்வர் கோப்பை -2024 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், கடந்த 4ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்ய நேற்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று, முன்பதிவு செய்ய, செப்., 2ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை அழைக்கலாம்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். உடன் தலைமைச் செயலக அதிகாரிகள் இருந்தனர்.
சென்னையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ” கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தை தமிழக முதலமைச்சரிடமிருந்து எதிர்பார்த்தோம். உண்மையில் ஜாதி மத பாகுபாடு பார்க்கவில்லை என்றால், இந்து மக்களுக்கு தமிழக முதல்வர் என்ற முறையில் வாழ்த்து தெரிவிக்கலாம். ஆனால் அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை” என குற்றம்சாட்டி பேசினார்.
Sorry, no posts matched your criteria.