India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நமீதாவிற்கு நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். இதுகுறித்து விசாரிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நமிதா மனது புண்படும்படி, சட்டத்திற்கு புறம்பாக எதுவாக நடந்திருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நமிதா வருத்தப்பட வேண்டாம், அவர் வருத்தப்படுவதாக இருந்தால் நாங்கள் எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என சென்னையில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில், பெண் மென் பொறியாளர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. கரூரில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலானது, காட்பாடி அருகே வந்தபோது, இளைஞர்கள் 2 பேர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து, அந்தப் பெண் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பேரில் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமும், ஆடல், பாடல் என்ற பேரில் கலாச்சார சீரழிவுக்கான சூழ்நிலையை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி உருவாக்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத் கூறியுள்ளார். மேலும், மாணவர்கள், இளைஞர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தாமல் தன்னிலை மறந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில், கடந்த 20 நாட்கள் (ஆக.5-25) ‘ZERO ACCIDENT DAY’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக, 26ஆம் தேதி ஒருநாள் மட்டும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டிருந்தனர். அதன்படி, நேற்று ஒரு நாள் சாலை விதிகளை மதித்து பொதுமக்கள் பயணித்தனர். இதனால், சென்னையில் நேற்று எந்தவொரு இடத்திலும் விபத்துக்கள் நடைபெறவில்லை.
காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, குடிப்பழக்கத்தால்தான் தனது வாழ்க்கை இப்படி மாறியதாகவும், அதனால் யாரும் குடிக்கு அடிமையாக வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மழை பெய்யுமா? பெய்யாதா?
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று 27.08.24 காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கூட்டத்தில் CITU, ATP, LPF உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52-ஆம் ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, வருகின்ற செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி சென்னை மயிலை உயர்மறைமாவட்டப் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி மற்றும் தேர்பவனியும் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடசென்னை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அண்ணாவின் 116 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி எனக் கூறி விட்டு போராட்டம் நடத்தியதாக, இந்நிகழ்வில் தொடர்புடைய கட்சி நிர்வாகிகள் 160 பேர் மீது சட்ட விரோதமாக அனுமதியின்றி கூடியதாக, இரண்டு பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை பெருங்குடி பகுதியில் இன்று 51 அடி உயரமுள்ள கம்பத்தில் கழக கொடியினை ஏற்றி வைத்தார் கட்சியின் பொதுச் செயலாளர் புஷ்பி ஆனந்த். அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.