India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மாநகராட்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கவுன்சிலர்கள் மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கே.என்.நேருவுக்கு அறிக்கை சென்றுள்ளது. அதன் அடிப்படையில், 4 திமுக, 1 அதிமுக கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்ய விளக்கம் கேட்டு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால், 5 பேரின் பதவிகளும் பறிபோக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயல் என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்களின் சொந்த வீடு எண்ணத்தில், திமுக அரசு மண் அள்ளிப்போட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், சென்னை மட்டுமல்லாமல் நகராட்சி, “பேரூராட்சிகளிலும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணங்கள் வானளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நடுத்தர மக்களின் நிலையை கருதி பழைய
கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு ஒருமுறை அப்போலோ மருத்துவமனையில் அவர் வழக்கமாக சிகிச்சை பெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில் ஈடுபட்ட சில கவுன்சிலர்கள் மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கே.என நேருவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில், 4 திமுக, 1 அதிமுக கவுன்சிலருக்கு தகுதி நீக்கம் செய்ய விளக்கம் கேட்டு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த 5 பேரின் பதவி பறிபோக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்குவரத்து கழக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனர் சிங்கார வேலு, மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும், சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்து போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சௌகார்பேட்டையில் உள்ள நகைக்கடைக்கு மாதவரத்தைச் சேர்ந்த சதீஷ் – தீபா தம்பதி, 5.5 சவரன் நகையை, புது நகையாக மாற்றுவதற்காக ரேபிடோ ஆட்டோவில் வந்தனர். இறங்கும்போது நகையை எடுக்க மறந்துவிட்டனர். தகவலின் பேரில், யானை கவுனி போக்குவரத்து போலீசார் ஆட்டோ பதிவெண், செல்போன் எண்ணை கண்டுபிடித்து ஆட்டோ டிரைவரை காவல் நிலையம் வரவழைத்தனர். சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுனர் பெஞ்சமின் வந்து நகைகளை ஒப்படைத்தார்.
பார்முலா கார் பந்தயம் ஆக.31 முதல் செப்.1 ஆகிய தேதிகளில், சென்னை அண்ணா சாலையில் நடக்கிறது. அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதனை நடத்திட ஸ்பான்சர்ஷிப் வழங்க வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கட்டாயப்படுத்திய ஸ்பான்சர் யார் யாரையாவது பெயர் சொல்ல சொல்லுங்கள்” என இ.பி.எஸ்.க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல் துறையின் தி.நகர் போக்குவரத்து அமலாக்க பிரிவு துணை ஆணையர் சி.கொடி செல்வம், அடையாறு போக்குவரத்து அமலாக்க பிரிவு துணை ஆணையராகவும், அடையாறு போக்குவரத்து துணை ஆணையர் கே.திருவேங்கடம், தாம்பரம் காவல் ஆணையரக ஆயுதப்படை துணை ஆணையராகவும், தாம்பரம் ஆயுதப்படை துணை ஆணையர் எஸ்.ராஜா தி.நகர் போக்குவரத்து துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று (ஜூலை 31) ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 – ரூ.38க்கும், சின்ன வெங்காயம் ரூ.50 – ரூ.70க்கும், உருளைக்கிழங்கு ரூ.30 – ரூ.50க்கும், தக்காளி ரூ.20 – ரூ.28க்கும், பீன்ஸ் ரூ.50 – ரூ.65க்கும், சவ் சவ் ரூ.25 – ரூ.28க்கும், முள்ளங்கி மற்றும் முட்டைகோஸ் ரூ.20 – ரூ.25க்கும், முருங்கைக்காய் ரூ.35 – ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.