India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தெரிவித்துள்ளார்.
சென்னையின் முக்கிய சாலைகளின் நடைப்பாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற கோரி பத்திரிக்கையாளர் வாராகி தொடர்ந்த வழக்கில், சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் அசோக் நகர் இஎஸ்ஐ சாலை, தி.நகர், வேளச்சேரி போன்ற பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பிற்கு எதிராக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசையின் வேகமாறுபாடு காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. தற்போது வரை லேசான சாரல் மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு காலை வகுப்புகள் 8 மணி நேரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அரசு பொது தேர்வுகள் நெருங்கி வருவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சென்னை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மஞ்சன்(55), நேற்றிரவு மதுபோதையில் ஜாபர்கான் பேட்டை பச்சையப்பன் தெரு சாலையோரத்தில் படுத்து கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரித்ததில், கார் ஓட்டியது நடிகை ரேகா நாயரின் கார் டிரைவர் பாண்டி(25) என்பதும், கார் நடிகை ரேகா நாயரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், அண்ணா நகர், கோயம்பேடு, சென்ட்ரல், ராயபுரம், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, LIC, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. எனவே, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் அனைவரும் குடை, ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினை முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் தனது மனைவியுடன் சந்தித்தார். அப்போது, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். உடன் தலைமைச் செயலக அதிகாரிகள், மற்றும் அமைச்சர்கள் இருந்தனர்.
சென்னையில் மழைக்காலம் என்பது மிகவும் முக்கியமான காலகட்டமாகும். கடந்தாண்டு சென்னையில் வரலாறு காணாத மழை பதிவாகி இருந்தது. அது சென்னையில் வசிக்கும் நமக்கு ஒரு பாடமாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோரிக்கை வைத்த பகுதிகளிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், இன்று முகாம் அலுவலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் இயந்திரமான காவிரி கடந்த 2 மாதம் முன்பு, அடையாறு மேம்பாலத்தின் கீழ் இருந்தது. வலுவான பாறைகள் காரணமாக பணிகள் மெதுவாகவே நடைபெற்றது. இந்நிலையில், இந்த இயந்திரம் தற்போது வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.