India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் நாளை(ஏப்.30) நடைபெறும் CSK-பஞ்சாப் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள், போட்டிக்கான டிக்கெட்டுகளை வைத்து இலவசமாகப் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி ரயில் நள்ளிரவு 1 மணிக்கு அல்லது போட்டி முடிந்த 90வது நிமிடத்தில் புறப்படும். *இந்த செய்தியை IPL பார்க்க செல்லும் நண்பர்களுக்கு பகிரவும்.
சென்னை: கனிமங்கள் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு இனிமேல் e-அனுமதி கட்டாயம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் சகதே அறிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட கட்டட வேலைகளில் கிடைக்கும் கனிமங்களை அனுமதி இல்லாமல் கடத்தினால், வாகன உரிமையாளர், டிரைவர் மற்றும் நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசு திட்டங்களை பெற சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் என பல வகை சான்றிதழ் தேவைப்படுகின்றன. இவற்றை பெறுவதற்கு வசதியாக சென்னையில் மட்டும் 162 இ-சேவை மையங்கள் உள்ளன. அவை எங்கே உள்ளன என்ற முழு விவரங்கள் உள்ள PDF-ஐ <
ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:
* காவல்துறைக்கு உடனடி அழைப்பு
* அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி
* வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு
* ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை
* கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை
* 24X7 நேரடி கண்காணிப்பு
* 360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்
* எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்
* எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு
* GPS மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு
* உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்
* பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு
▶திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், ▶ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயில், ▶எருக்கஞ்சேரி முத்துமாரியம்மன் கோயில், ▶கொளத்தூர் லட்சுமி அம்மன் கோயில், ▶சிந்தாதிரிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோயில், ▶சேத்துபட்டு கருமாரியம்மன் கோயில், ▶திருவல்லிக்கேணி நாகாத்தம்மன் கோயில், ▶பாடி படவட்டம்மன் கோயில், ▶பெரம்பூர் மொண்டி மாரியம்மன் கோயில், ▶பெரவள்ளூர் தான்தோன்றியம்மன் கோயில், ▶மெட்ராஸ் காளி பாரி. *SHARE*
சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் எருக்கஞ்சேரியை சேர்ந்த கிஷோர் (22), முகமது அலி (22) ஆகியோர் சமூகவலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும், சிறுமியிடம் பேசியதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர், போலீஸார் பெண் குரலில் பேசி சேலத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு ரோபோடிக் போலீசை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது. ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்., வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் நிறுவப்பட உள்ளது.
சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (28.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
Sorry, no posts matched your criteria.