India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்ட சேவைகளையும் கருவிகளையும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு திட்டங்களை செயல்முறைக்கு கொண்டு வந்தார்.
இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி, சென்னையில் அக்.8ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறும் என இந்திய விமானப்படை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அன்றைய தினம் காலை 7.45 மணிக்கு, இந்திய விமானப்படையின் அணிவகுப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை தொடர்ந்து மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான விமான கண்காட்சியும் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அளிக்கும் போட்டித் தேர்வுகளுக்கான 6 மாத இலவச பயிற்சிக்கு www.cecc.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 24 ஆகும். மேலும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி வளாகம், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படுகிறது. 3 நாட்களாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கிறார். அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய மகாவிஷ்ணு ஏற்கனவே கைதான நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரியவரும்.
கோயம்பேடு காய்கறி சந்தையில், கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்கிறது. அதன்படி, இன்றும் (1 கிலோ) தக்காளி ரூ.25, கேரட் ரூ.90, வெங்காயம் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.45, சின்ன வெங்காயம் ரூ.75, எலுமிச்சை ரூ.110, பீன்ஸ் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் மழை பொழிவு அதிகமானால், விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையை சேர்ந்த கார்த்திக் நீலாங்கரையில் உள்ள தனது நிலத்தை சிலர் அபகரிக்க முற்படுவதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அப்போதைய காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆனந்தபாபுவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழம்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேருபார்க் ஹவுசிங் போர்டில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு சென்ற ஐந்து இளைஞர்கள் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இதில், ஐவரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் மூன்று பேர் உடலை மீட்டுள்ளனர். மேலும், இருவரின் உடல்களை தேடி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் இறந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் நேற்று இரவு அமெரிக்காவிலிருந்து காணொலி வாயிலாக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளை ஆய்வு செய்தார். இதில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டனர். முப்பெரும் விழா ஏற்பாடுகள், கழகத்தின் பவளவிழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பொது உறுப்பினர் கூட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
செங்குன்றத்திலிருந்து சிந்தாதிரிப்பேட்டை நோக்கி சென்ற வாடகை கார் ஒன்று, செங்குன்றம் அருகேயுள்ள அலமாதி பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த தாய், மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தந்தை, மகன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் செங்குன்றம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.