Chennai

News September 10, 2024

3D வடிவில் பேருந்து நிழற்குடை பெயர் பலகை

image

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை நகரம் முழுவதும் பேருந்து நிழற்குடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்கள், நிழற்குடைகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அதிநவீன 3D வடிவில் அச்சிடப்பட்ட பேருந்து நிழற்குடை நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 10, 2024

6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

அண்ணா நகரை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வயிற்று வலியால்‌ துடித்துள்ளார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் , 14 வயது சிறுவனை கடந்த 1 ஆம் தேதி அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

News September 10, 2024

3 நாட்களில் 58 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் கைது

image

சென்னையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக, சிறப்பு அதிரடி சோதனைகள் மேற்கொண்டு கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன் பேரில், 6, 7, 8 ஆகிய 3 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தொடர்பாக 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 334 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், 58 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News September 10, 2024

சிலை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

image

சென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, காவல்துறை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாளில், அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். அனுமதி தரப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்கப்பட வேண்டும். சிலை ஊர்வலத்தில் கட்டுப்பாடுகளை மீறினாலோ அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News September 10, 2024

4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு

image

சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை இடங்களில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைக்கலாம். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16,500 போலீசார் 2,000 ஊர்க்காவல் படையினரை கொண்டு சிறப்பு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

News September 10, 2024

மது கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்

image

மதுவிலக்கு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதில் திமுகவிற்கும் உடன்பாடு உண்டு, அதிமுகவிற்கும் உடன்பாடு உண்டு, விசிக-விற்கும் உடன்பாடு உண்டு, அனைத்து இடதுசாரி கட்சிகளுக்கும் உண்டு தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும் போது, மது கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் என்ன என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News September 10, 2024

சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என முறையீடு

image

சென்னை ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்தது குறித்து தகவல் தெரிவித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அரசுத்தரப்பு மீறியுள்ளதாகவும், ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை எனவும் ரேஸ் கிளப் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டப்படி உரிய நிவாரணம் கோரி வழக்கு தொடரலாம், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

News September 10, 2024

அக்.2-இல் விசிகாவின் போதை ஒழிப்பு மாநாடு

image

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அரசு மதுபான கடைகளை மூட வேண்டும் சாராயத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம்” என்று கூறினார்

News September 10, 2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கம் போராட்டம்

image

சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பல்வேறு அம்சங்களை கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தேதிகளில் கோட்டை முற்றுகை என தெரிவித்துள்ளனர். கடந்த 6-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது.

News September 10, 2024

நடப்பு ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் குறைப்பு

image

நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கல்வியாண்டில் வழக்கமாக 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் இந்த கல்வியாண்டில் 220 நாட்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

error: Content is protected !!