India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை செய்தனர். அப்போது பயணிகள் உரிய வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட பொருட்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் உரிய வரி செலுத்தாத பொருட்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தில் பின்னணி பாடகர் மனோவின் மகன் மது போதையில் அருகில் இருந்தவரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. பாடகர் மனோவின் மகன் தாக்கியதில் காயம் அடைந்த நபர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மனோ மற்றும் அவரது மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகிகள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
இந்திய தடகள சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் சென்னையில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகின்றன. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று முதல் செப்.13 வரை 3 நாட்களுக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன.
சென்னை வண்டலூர், பொத்தேரி, கிண்டியில் ரயில்களில் அடிபட்டு மூன்று பேர் இன்று உயிரிழந்துள்ளனர். வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரை சேர்ந்த பப்பு குமார் உயிரிழந்தார். மேலும் பொத்தேரி ரயில் நிலையம் அருகே விழுப்புரத்தைச் சேர்ந்த ராமு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கிண்டி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் அடிபட்டு 25 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்தியன் ரேசிங் லீக் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் சுற்றுப் போட்டிகள் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெற்றது. இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இரவு நேர பந்தயமாக தீவுத்திடலில் ஆக.31, செப்.1ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் 3ம் சுற்றுப் போட்டிகள் செப்டம்பர் 14, 15 தேதிகளில் மெட்ராஸ் சர்வதேச கார் பந்தய ஓடுதளத்தில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கழிவறையை சுத்தம் செய்யும் உபகரணத்திற்குள் தங்கத்தை மறைத்து வைத்து, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் தங்கத்தை வெளியே எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது, விமான நிலைய அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில், வரும் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாமில் நடைபெற உள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
கோயம்பேட்டில், மதுபான பாரில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பாஜக வழக்கறிஞர் கர்ணா மீது கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில், விருகம்பாக்கம் பாஜக வடக்கு மண்டல தலைவரான அரவிந்த், பாரில் மது அருந்த வந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின்போது பாஜக வழக்கறிஞர் கர்ணா பீர் பாட்டிலை எடுத்து அரவிந்த் தலையில் தாக்கியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரில், கர்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை நகரம் முழுவதும் பேருந்து நிழற்குடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்கள், நிழற்குடைகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அதிநவீன 3D வடிவில் அச்சிடப்பட்ட பேருந்து நிழற்குடை நிறுவப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.