Chennai

News September 14, 2024

கருணாகரனின் தந்தை காலமானார்: அமைச்சர் அஞ்சலி

image

திரைப்பட நடிகர் கருணாகரனின் தந்தை காளிதாஸ், இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் காரப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

News September 14, 2024

வானகரம் – நெற்குன்றம் இடையே போக்குவரத்து நெரிசல்

image

வானகரம் – நெற்குன்றம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதால், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பல மணி நேரங்களாக வாகனங்கள் நகராமல் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, ஊர்ந்தபடி வாகனங்கள் செல்கின்றன.

News September 14, 2024

மிலாது நபி: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் வரும் 17ஆம் தேதி மிலாது நபி தினத்தன்று விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

News September 14, 2024

20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேமுதிக

image

மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி, இன்று 20ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005 செப்.14ஆம் தேதி மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் திரள் கூட்டத்தில், விஜயகாந்த் தேமுதிக கட்சியைத் தொடங்கினார். 21ஆம் நூற்றாண்டில் ஒரு தமிழ் அரசியல் கட்சி கண்ட மாபெரும் அறிமுக மாநாடு அதுவே. தேர்தல் களத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை தேமுதிக சந்தித்துள்ளது. 2011இல் எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது.

News September 14, 2024

பார்களை கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவு

image

சென்னையில் உள்ள பார்கள் செயல்படும் நேரங்களை கண்காணிக்க காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ். உத்தரவிட்டுள்ளார். மேலும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பார்கள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், விதிமுறைகளை மீறி அனுமதி இன்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுவிலக்கு பிரிவுக்கு ஆணை பிறப்பித்துள்ளார். விதிகளை மீறினால் பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு என்றார். ஷேர் பண்ணுங்க

News September 14, 2024

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

image

அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்ததில், சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. மேலும் சதீஷ்குமார்(32) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. பின் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

News September 14, 2024

கலைஞர் நூற்றாண்டு நாணயம் விற்பனைக்கு வந்தது

image

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம், இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணயம் விற்பனை செய்யும் இணையதளத்தில், வாங்கிக் கொள்ளலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு இன்னும் 155 நாணயங்கள் மட்டுமே உள்ளது. ஒரு நாணயத்தின் விலை ரூ.4,180 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் 1 நாணயம் ரூ.10,000க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய பிரபல ரவுடி கைது

image

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியரை அறிவாளால் தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர் நித்திஷிடம், ரவுடி பென்னி கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் தர மறுத்த நித்திஷை, தலையில் கத்தியால் வெட்டிவிட்டு ரவுடி பென்னி தப்பி தலைமாறைவாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பென்னியை மடக்கிப்பிடித்து விசாரித்து வருகின்றனர்.

News September 14, 2024

ஓணம் பண்டிகைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து

image

“சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்” என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மக்களின் பண்பாட்டு பெருவிழாவான ஓணம் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் நாளை கொண்டாடப்படுகிறது. திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு இடர் என்றால் உதவிக்கரம் நீட்டா தமிழ்நாடு முன்னிற்கும் என கூறியுள்ளார்.

News September 14, 2024

எழும்பூரில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போராட்டம்

image

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!