Chennai

News September 16, 2024

ராமசாமி படையாட்சியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

image

ராமசாமி படையாட்சியார் அவர்களின் 107 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கிண்டி அண்ணாசாலை ஹால்டா சந்திப்பில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், என பலர் கலந்து கொண்டனர்.

News September 16, 2024

பட்டினம்பாக்கம் கடற்கரையில் குவிந்த சிலை கழிவுகள்

image

சென்னையில் மட்டும் நேற்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் பட்டினப்பாக்கம் கடற்கரை ஓரத்தில் அதிகமாக குவிந்துள்ளன. இதனால், அப்பகுதி முழுவதும் குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. இதனை அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 16, 2024

விராட் கோலி அடித்த பந்தால் ஏற்பட்ட பாதிப்பு

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது விராட் கோலி அடித்த பந்து ஓய்வறையின் தடுப்புச் சுவரை பதம் பார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியா வங்கதேசம் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடந்த பயிற்சியின் போது விராட் கோலி அடித்த பந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சென்றது.

News September 16, 2024

சமூக நீதி நாள் உறுதிமொழி எற்பு நிகழ்ச்சி

image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று சமூக நீதி நாள் நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 16, 2024

முதலமைச்சரை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை இன்று விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுவதை ஒட்டி முதலமைச்சரை சந்திக்க உள்ளார். மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சியினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், முதல்வருடனான சந்திப்பு நடைபெறவுள்ளது.

News September 16, 2024

சென்னை விநாயகர் ஊர்வல சர்ச்சையில் 63 பேர் மீது வழக்கு

image

சென்னை திருவல்லிக்கேணி மசூதி தெரு விழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பிடையே பரஸ்பரம் எதிர்புகள் ஏழுந்தது. இந்நிலையில், மசூதி தெரு வழியாக விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற இந்து முன்னனி அமைப்பைச் சேர்ந்த 63 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News September 16, 2024

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 183 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News September 16, 2024

சென்னையில் 1,878 சிலைகள் ஒரே நாளில் கரைப்பு

image

சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு கடலில் நேற்று (செப்.15) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், “விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன. பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,878 சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதற்காக 16,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்” என கூறினார்.

News September 16, 2024

தமிழ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காது தவறு தான்

image

சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேட்டியளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா,
“நடிகர் விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், தமிழ் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காது தவறு தான். இது பெரும்பான்மையான சமுதாயத்தை காயப்படுத்தும் என்று சொல்லக்கூடிய உரிமை பாஜகவுக்கு உள்ளது, திமுகவினர் தமிழுக்காக வெளியே கூச்சல் போடுபவர்கள், ஆனால் வீட்டினுள் வேறு மொழி பேசுகிறார்கள்” என்றார்.

News September 16, 2024

திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை: துரை வைகோ

image

மதிமுக எம்.பி. துரை வைகோ இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். திருமாவளவனின் பேச்சு அவருடைய உரிமை. தமிழ்நாட்டில் இருப்பதை போன்ற மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் பதவியே தேவையில்லாதது. மதுவிலக்கு கொள்கையில், டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்றுதான் முதலமைச்சரே தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!