India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளில், பாலாஜியை தேடி வந்த போலீசார், இன்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, பாலாஜி, தப்பித்து செல்ல போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து போலீசார், பாலாஜியை சுற்றி வளைத்து என்கவுண்டர் செய்தனர். அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக பவள விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, “இந்த தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும். ஆனவத்தால் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் சொல்கிறேன். எந்த இயக்கமாக இருந்தாலும் அதற்கு கொள்கை தேவை. அதனை வழிநடத்த தலைமை தேவை. இதுபோன்று எந்த கட்சியும் வெற்றி பெறவில்லை என்று 2026இல் சொல்ல வேண்டும்” என்றார்.
இன்று அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாங்காட்டு, மாங்காடு டவுண், ரகுநாதபுரம், கொள்ளுமாணிக்கம், சிக்கராயபுரம், சிவந்தாங்கல், பத்திரிமேடு, நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், திருமங்கலம், ஆயிரம் விளக்கு, மேடவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது, “RCB அணிக்கு எப்படியாவது கோப்பையை வென்று கொடுக்க வேண்டும். இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை இப்போதைக்கு இல்லை. ஆனால், அது ஒரு நாள் நடக்கும். ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது மிகவும் வரவேற்கதக்கது. போட்டியை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். கடைசி வரை CSK அணிக்காக விளையாடாதது வருத்தம் தான்” என்றார்.
திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு பிடித்த ஒருவர் தலைவராக வருவது நல்ல விஷயம்தான். ஆனால், தற்போது விஜய் தவறான பாதையில் செல்வது வருத்தமா இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்து கொண்டு, தற்போது ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமா உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மீனம்பாக்கம் பகுதியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இடங்களில் இயல்பை விட 5 முதல் 7 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கும். மே மாதத்தில் வீசும் வெப்ப அலைக்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மகாவிஷ்ணு சர்ச்சை காரணமாக, சென்னை மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தஞ்சை சரபோஜி மன்னர் நூலக நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் செயலாளர் ஏஞ்சலோ கல்வி அலுவலர் பொறுப்பை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என லட்சக்கணக்கில் பங்கேற்கும் திமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணியளவில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, திமுகவின் 75ஆவது ஆண்டு பவள விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா என திமுகவின் முப்பெரும் விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
சென்னை புறநகர் பகுதியான பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அனைத்து வீடுகளிலும் உள்ள பாத்திரங்கள், பைகள், மூலை முடுக்குகளில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். சோதனையில், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமார் விசாரணைக்கு இன்று ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ராஜ்குமார் இடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.