India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் கடந்த 8 மாதத்தில் ரூ.132.46 கோடி பணம் பறித்தது தொடர்பாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரிகள் போல் பேசி, செல்போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யச்சொல்லி பணமோசடியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பாதசாரி இடங்களை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் கடந்த 2 நாட்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. தாம்பரம் மற்றும் ஓ.எம்.ஆர். போன்ற முக்கிய பகுதிகளில், கடந்த வாரம் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தன. தவறாக வாகனம் ஓட்டியதாக இதுவரை 5,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சென்னை பல்கலை., ஆசிரியர்கள் 8 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலை., ஆசிரியர்கள், அலுவலர் நலச்சங்கங்களின் பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நலச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஹரிஷ்(17), ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹரிஷை காப்பாற்ற சென்ற அவரது நண்பர் மோகன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செல்லும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி பகுதியில் ராஜா, தனசேகர் , மயிலாப்பூர் பகுதியில் மனோகரன் , கீழ்பாக்கம் பகுதியில் ராமமூர்த்தி, அடையார் பகுதியில் பிரவீன், விமல் , தியாகராய நகர் பகுதியில் விஜயலெட்சுமி , ஸ்ரீநிவாசன் ஆகிய அதிகாரிகள் இன்று இரவு வாகன ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
தேமுக 20ஆம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்மபூசன் விருது மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் முப்பெரும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம், ஜாபர்கான் பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பெண்களுக்கு தையல் இயந்திரம், அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 1,000 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கினார்.
நங்கநல்லூரில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் வெற்றி மற்றும் வேலன் ஆகிய 2 தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி செலுத்தக்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், பதிலளிக்காததால் இன்று காலை 2 தியேட்டர்களுக்கும் மாநகராட்சி சீல் வைத்தது. மேலும், தியேட்டர்களுக்கு சீல் வைத்த மாநகராட்சி உதவி வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
நாளை அம்பத்தூர் சிட்கோ பகுதியில் பட்டரவாக்கம், சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டடம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆதம்பாக்கம், வேல் நகர், மோகன புரி, பிருந்தாவன் நகர், நங்கநல்லூரில் சோலையப்பன் தெரு, யூனியன் கார்பைடு காலணி, புழுதிவாக்கம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
கோயம்பேடு பூ சந்தையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, ரோஜா பூ ரூ.40, செண்டுமல்லி ரூ.60, சாமந்தி பூ ரூ.110, சம்பங்கி பூ ரூ.70, கனகாம்பரம் ரூ1,000, மல்லி ரூ.1,200, அரளி பூ ரூ.70க்கு விற்பனையாகிறது. நேற்றைவிட இன்று ரூ.10 – ரூ.15 வரை விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் தீபா, திருமணம் ஆகாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் நடத்திய விசாரனையில், நேற்றிரவு புரோக்கர் மூலம் தீபாவை வர வைத்ததாகவும், பின்னர் பணம் கொடுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், தீபாவைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து, மணிகண்டனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.