India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 பேர் முன்னதாக குண்டர் சட்டத்தில் கைதான நிலையில், தற்போது மேலும், 15 குற்றவாளிகள் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், ரவுடி நாகேந்திரன் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.
சென்னை ஆலந்தூர் அருகே அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடக செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், ஆலந்தூர் அம்மா உணவகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றும் உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ஈ.பி.எஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் இரண்டாவது ஓடுதளம் பயன்பாட்டிற்கு வந்த பின் சேவை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் முதல் பயன்பாட்டிற்கு வந்த இரண்டாவது ஓடு தளம் சேவைகளை அதிகரித்து, அதிக விமானங்களை கையாள்வதில் ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி இருக்கிறது சென்னை. அதிக விமான சேவையில் மும்பை, பெங்களூருவுக்கு அடுத்த இடத்தில் சென்னை உள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட 3ஆவது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு பெற்றுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை காவேரி இயந்திரம் நிறைவு செய்தது. சென்னையில் 116.1 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராஜ்பவன் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் உட்பட 21 கால்வாய்களை தூர்வார ரூ.86.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நீதி வழங்கவில்லை. உரிய அனுமதி மற்றும் நிதி வழங்காத நிலையில், தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த வாரம் வரை 1 கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று தக்காளி விலையானது ரூ.20 முதல் ரூ.30 வரை திடீரென குறைந்தது. இதனால், 1 கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஷேர் பண்ணுங்க.
2024 நிதியாண்டில், குறிப்பிடத்தக்க 95,000 ஊழியர்களைச் சேர்த்து இந்தியாவின் புதிய உலகளாவிய திறன் மையம் அதிகார மையமாக ‘சென்னை மாநகராட்சி’ முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பாரம்பரிய தொழில்நுட்ப மையங்களை விஞ்சும் வகையில், நகரின் உலகளாவிய திறன் மையம் பணியாளர்களை 2,13,000க்கும் மேல் கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் (www.passportindia.gov.in) இன்று இரவு 8 மணியில் இருந்து செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த பராமரிப்பு காலத்துக்கு பிறகு இணையதளத்தை பயன்படுத்தும்படி கேட்டு கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து 187ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாலியல் தொழில் செய்து வந்த தீபா என்ற இளம்பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்து வீசிய இளைஞர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, கடந்த 17ஆம் தேதி தீபாவை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் ரூ.12,000 தருமாறு கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து அவரை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.