Chennai

News May 7, 2025

சென்னையை வாட்டி வதைக்கும் வெயில்

image

சென்னையில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெப்பம் பதிவாவதால், வேலைக்கு செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால், மக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். நீங்களும், இந்த கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பகல் 11 மணிக்கு மேல் வெளியே செல்வதை முடிந்தளவுக்கு தவிர்த்திடுங்கள். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

சென்னையில் பார்க்க வேண்டிய கடற்கரைகள்

image

✅ மெரினா கடற்கரை, சேப்பாக்கம்
✅ எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்
✅ கோவளம் கடற்கரை, கோவளம்
✅ திருவான்மியூர் கடற்கரை, திருவான்மியூர்
✅ வி.ஜி.பி கோல்டன் கடற்கரை, ஈஞ்சபக்கம்
✅ நீலாங்கரை கடற்கரை
✅ Breezy கடற்கரை, வால்மீகி நகர்
✅ பட்டினம்பாக்கம் கடற்கரை
✅ மஹாபலிபுரம் கடற்கரை
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி இங்கெல்லாம் போலாம்னு கூப்பிடுங்க

News May 7, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (30.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும். பகிரவும்

News May 7, 2025

குப்பை கொட்டினால் ரூ.5 லட்சம் வரை அபராதம்

image

சென்னை மாநகராட்சியின் புதிய அறிவிப்பின் படி 20,000 சதுர மீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள பொது பயன்பாட்டு இடங்களில் அதிக அளவில் குப்பைகள் வீசப்படும் பகுதிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், 500 ச.மீ. முதல் 20,000 ச.மீ. வரை பரப்பளவுள்ள இடங்களில் அதிக குப்பைகள் சேரும் பகுதிகளுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். தவறுகளை சரிசெய்வதற்கான எச்சரிக்கை 15 நாட்கள் வழங்கப்படும்.

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, சென்னை அஷ்டலட்சுமி உள்ளிட்ட லட்சுமி கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News May 7, 2025

மாமன்ற கூட்டத்தில் 75% கவுன்சிலர்கள் பங்கேற்கவில்ல

image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று (ஏப்ரல் 30) ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கவுன்சிலர்கள் அனைவரும் 10 மணிக்கு வந்திருக்க வேண்டும் என மேயர் பிரியா வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தின்போது மதியம் 1 மணி நேர நிலவரப்படி 200 கவுன்சிலர்களில் 34 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர். 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

News May 7, 2025

குடிநீர் பிரச்னையா? இந்த நம்பரை அழையுங்கள்

image

சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு, 044 – 4567 4567 அல்லது 1916 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட ‘நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளிக்கலாம். அல்லது, மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் 94999 33644 எண்ணுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். குடிநீர் வடிகால் வாரியம் 24 மணிநேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியாக பேசவேண்டும் என்று சிறுமியை அழைத்த அறிவியல் ஆசிரியர் மோகன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட மற்றொரு ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். உப்பு, குங்குமம், மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், சென்னையில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி / பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம். அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (29.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*

error: Content is protected !!