Chennai

News January 23, 2026

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும். ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

சென்னை: ரேஷன் கார்டு உள்ளதா? மிஸ் பண்ண வேண்டாம்!

image

சென்னை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்த்தல் & நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், கைபேசி எண்ணை பதிவு செய்யவோ (அ) மாற்றம் செய்யவோ அலைய வேண்டாம். இதற்காக நாளை (ஜன.24) சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

BREAKING: சென்னையில் கனமழை வெளுக்கும்

image

சென்னையில் இன்று (ஜன.23) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களுக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோர்ட் ஆகியவற்றை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

சென்னையில் EB பில் எகுறுதா..?

image

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேலை உங்கள் பில் அதிகமாக வந்தால் 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். உடனே இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

சென்னை: சமயலறையில் தீப்பற்றி ஒருவர் பலி

image

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் முருகன் (46). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் பொருட்களுக்கு மேலே இருந்த மண்ணெண்ணைய் பாட்டில் கீழே விழுந்ததில், சமையல் அறை முழவதும் தீ பற்றி முருகன் உடலிலும் பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 23, 2026

சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

image

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 23, 2026

சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

image

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 23, 2026

சென்னையில் சொந்த தொழில் தொடங்கணுமா?

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

சென்னை: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

சென்னை மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக் <<>>செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம்.. (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். ஷேர் பண்ணுங்க.

News January 23, 2026

சென்னை: மரக்கன்றுகளை முன்பதிவு செய்யும் திட்டம்!

image

சென்னை மாநகராட்சி மற்றும் வனத்துறை இணைந்து தலா 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2 நாற்றுப்பண்ணைகள் அமைத்துள்ளன. நகர்ப்புற பசுமையை மேம்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ‘மரக்கன்றுகளை முன்பதிவு செய்யும்’ புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் குறித்த மேலான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!