Chennai

News August 8, 2025

100 மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் மாணியம்

image

சென்னை ராயப்பேட்டையில் இன்று (08.08.2025) 100 மகளிர்களுக்கு புதிய ஆட்டோக்களை வாங்குவதற்காக தலா ரூ.1 லட்சம் மானியத்தொகையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இது அனைத்து மகளிர் ஆட்டோ ஓட்டுனர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News August 8, 2025

அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

image

பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுபிரமணியன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், துறையின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பங்கேற்றனர்.

News August 8, 2025

சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

image

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார். மாநில கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில், இன்று கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.

News August 8, 2025

சென்னை SBI வங்கிகளில் வேலை…

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னையில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <>லிங்கில் <<>>வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 8, 2025

சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்-நியூஸ்

image

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை இனி Uber App மூலம் எளிதாக பெற முடியும். Uber App மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் 50% தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது. இதனால் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டாம். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பாதி விலையில் மெட்ரோவில் பயணிக்கலாம். UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை QR கோடுகளாக பெறலாம். இந்த நல்ல செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 8, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

சென்னையில் இன்று (ஆக.8) திருவொற்றியூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிக்க பரிசீலனை

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இன்று (ஆக.07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

News August 7, 2025

JUST IN: சென்னையில் IT ஊழியர் விபரீத முடிவு

image

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 7, 2025

மெரினாவில் இதற்கு தடை

image

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசாபுரம் வரை உள்ள பகுதியில், கடைகள் அமைக்கவும் வியாபாரம் செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அந்த பகுதி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதை குறிப்பிடும் வகையில், பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி அங்கு கடைகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!