Chennai

News September 25, 2025

சென்னையில் சினிமா நடன கலைஞர் கைது

image

சென்னை அசோக் நகர் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சினிமா நடன கலைஞர் பிரவீன் (27) மற்றும் அவரது 11 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மெத்தபெட்டமைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இவர்கள், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் உட்பட பல படங்களில் நடனமாடியுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்றாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 25, 2025

சென்னையில் இன்று சிறப்பு கல்வி நிகழ்ச்சி

image

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் 7 மணிவரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

News September 25, 2025

சென்னை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

image

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<> TN nilam citizen portal <<>>தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News September 25, 2025

சாந்தோம்: மாணவர்களுடன் உணவருந்திய MLA வேலு

image

சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள மெரினா பார்க்கில் நேற்று (செப் 24), மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா. வேலு, 51 பள்ளி குழந்தைகளுடன் மதிய உணவு உண்டார். “உண்டு மகிழ்” என்ற திட்டத்தின் கீழ், தொடர்ந்து 51-வது மாதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் நோக்கம், குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகும். மேலும் அவர் குழைந்தைகளுடன் உரடியாடினார்.

News September 25, 2025

சென்னை: விடைபெற்றது ஏவிஎம் திரையரங்கம்

image

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த வடபழனி ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரையரங்கள் என்னென்ன திரைப்படங்களை பார்த்துள்ளீர்கள்? உங்கள் அனுபவங்கள், நினைவுகளை கமெண்ட்ல சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.

News September 25, 2025

சென்னை: 10th பாஸ் போதும்…Post officeல் வேலை! தேர்வு கிடையாது

image

இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 18 – 40 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000- 29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு…இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News September 25, 2025

சென்னை: மூக்கில் ரத்தம் கசிந்து சிறுமி பலி

image

ஈரோட்டை சேர்ந்த மகேந்திரன் கல்லீரல் பிரச்சனை காரணமாக வடபழனியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது 6 வயது மகள் சஞ்சனாஸ்ரீ மர்ம காய்ச்சல் காரணமாக மூக்கில் ரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு ஆஸ்பிரேஷன் நிமோனியா என்ற நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 25, 2025

ராயபுரம் மருத்துவமனை முன்பு இப்படியா?

image

ராயபுரம் அரசு தாய்-சேய் நல மருத்துவமனை முன்பு சாலையோரத்தில் சுகாதாரமற்ற முறையில் இட்லி விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அங்கு இருந்த பெண் ஒருவர், நீங்க சம்பாதிக்க நாங்க பலிகடா ஆகணுமா.. இந்த இட்லிய நீ சாப்பிடுவியா? கர்ப்பிணி இதை சாப்பிட்டா என்ன ஆகும் என கேள்வி எழுப்பினார். இச்சம்பவம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

News September 25, 2025

சென்னை மாநகராட்சிக்கு பறந்த கடிதம்

image

சென்னை, சூளைமேட்டில் கடந்த மாதம் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீஸார் கடிதம் எழுதி உள்ளனர். மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டவர்கள் யார்? என கேட்டு சூளைமேடு போலீஸார் விரிவான கடிதம் அறிக்கை அளிக்கும் படி சூளைமேடு போலீஸ் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

News September 25, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (24.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!