India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வாரும் 22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, அவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் (38) என்பதும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், பகுதி நேர ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவிக்கு கடந்த மாதம் snapchat செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தரங்க புகைப்படங்களையும் கேட்டிருக்கிறார். பின்னர் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த மாணவி வீடியோ காலில் வரும்படி அழைத்திருக்கிறார். அதற்கு மறுத்த அந்த நபர் மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வெயியிட்டுவிடுவேன் என மிரட்ட தொடங்கி உள்ளார்.
செங்கல்பட்டு வள்ளியூரில் 500 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். இங்கு வெண்கல ஆஞ்சநேயர், அம்புஜவல்லி தாயார் மற்றும் ஆழ்வார்கள் காட்சி தருகின்றனர். இங்கு தாயாருக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இக்கோவில் செங்கல்பட்டில் இருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் விலகிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் இரா.மகேந்திரனை சீமான் தரப்பு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் அதை ஏற்காத அவர், “நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்” என தீர்கமாக தெரிவித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும், விரைவில் இன்னும் சில முக்கிய விக்கெட்டுகள் விழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 5,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த டேவிடின் மகள் ஜீவிதா (13), 8-ம் வகுப்பு மாணவி, தாய் வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். விசாரணையில், சிறந்த மாணவியாக இருந்தும் தொடர்ந்து கொரிய வீடியோ கேம்ஸ் விளையாடியதால் மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (18.2.2025) மாலை 3.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் ‘குறை கேட்பு கூட்டம்’ அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மண்டல செயலாளரும், 2019ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளருமான இரா.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். சீமானுக்கு மிக நெருக்கமான தம்பியாக வலம் வந்தவர் இவர். கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் கொன்று புதைக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.