Chengalpattu

News November 10, 2024

அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய மாமன்ற உறுப்பினர்

image

தாம்பரம் மாநகராட்சியின் 50ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.யாகூப் இன்று அமைச்சர் தா.மோ. அன்பரசனை நேரில் சந்தித்தார். அப்போது தனது வார்டில் மக்கள் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினார். அதிகாரியிடம் தெரிவித்து மக்கள் வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறும் என அப்போது அமைச்சர் உறுதி அளித்தார்.

News November 9, 2024

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.11.2024 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933, 9486870577 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

துணை முதலமைச்சர் பிறந்தநாளை கொண்டாட மா.செ வேண்டுகோள்

image

துணை முதலமச்சர் “உதயநிதி ஸ்டாலின்” பிறந்தநாள் விழாவினை, மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 27வரை சிறப்பான முறையில் கொண்டாட காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் கா.சுந்தர் MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News November 8, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நவம்பர் 11,12,13 ஆகிய நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News November 8, 2024

பம்பைக்கு 60 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

விமான நிலையத்தில் உடைமைகளை பெறுவதில் தாமதம்

image

சென்னை விமான நிலையத்தில் துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் கன்வேயர், பெல்ட் மூலம் பயணிகளுக்கு வந்து கிடைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகிறது. இதனால், பயணிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இன்று அதிகாலை துபாயிலிருந்து வந்த பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேக்கேஜ்கள் கிடைக்காததால், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

News November 8, 2024

வழக்கறிஞரை தாக்கிய நால்வர் கைது

image

திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரத்தைச் சேர்ந்தவர் சுதன்குமார் (30). வழக்கறிஞரான இவர், நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வல்லிபுரம் வந்து கொண்டிருந்தபோது, ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த 4 பேருடன் தகராறு ஏற்பட்டது. இந்த தகராரில், சுதன்குமாரை நால்வரும் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து திருக்கழுக்குன்றனம் போலீசார் விசாரித்து குமரேசன், சந்தோஷ், சுகுமார், கருணா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News November 8, 2024

கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார், “செங்கல்பட்டு கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைதீர் கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் மூன்றாவது மாடியில், செங்கல்பட்டு மண்டல இணை பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில், மண்டல இணை பதிவாளர உள்ளிட்டோர் தலைமையில், இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. எனவே, பணியாளர்கள் தங்கள் பணி தொடர்பாகவும் மனுக்கள் அளித்து பயன்பெறலாம்” என்றார்.

News November 8, 2024

செங்கல்பட்டில் இன்று மின்தடை அறிவிப்பு

image

செங்கல்பட்டில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலூர், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, திருவடிசூலம், மடையத்தூர், அனுமந்தபுரம், காலவாக்கம், ஆலத்தூர், சிட்கோ, கருங்குழிபள்ளம், பண்டிதமேடு, பையனூர், கூத்தவாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News November 8, 2024

தாசில்தாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விஏஓக்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா தாசில்தாராக இருப்பவர் புஷ்பலதா. இவர், வண்டலூர் தாலுகாவில் பணிபுரியும் 17 வி.ஏ.ஓ.க்களுக்கு, திடீரென மெமோ அளித்துள்ளார். மெமோ அளிக்க காரணம் என்ன என வி.ஏ.ஓ.க்கள் கேட்டதற்கு எந்தவித காரணத்தையும் கூறவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வி.ஏ.ஓ.க்கள் அலுவலக உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதனால், ஊராட்சி வருவாய் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!