Chengalpattu

News March 8, 2025

முதலியார் குப்பம் படகு இல்லம்

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் இந்த படகு இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது.மாமல்லபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த படகு இல்லத்தில் பல வகையான படகு சவாரி,வாழைபழ படகு சவாரி,வட்டர் ஸ்கூட்டர்,விரைவு படகு சவாரி போன்றவை நடத்தப்படுகிறது. இதற்கு அருகில் உள்ள ஒதியூர் ஏரியில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது.ஓடியூர் ஏரியின் கடற்கரை தீவுக்கு மோட்டார் படகுப் பயணங்களை ஏற்பாடு செய்கிறது.ஷேர்

News March 8, 2025

தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு – மகன் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் கருப்பேரி பகுதியில் தந்தை மற்றும் மகனை அரிவாலால் வெட்டி விட்டு இளைஞர் தப்பியோட்டம். தப்பியோடிய இளைஞருக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். படு காயம் அடைந்த மகன் மகன் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரசிம்மன் ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.

News March 7, 2025

திருமண தடை நீக்கும் சுயம்பு சிவகாளியம்மன்

image

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில், புகழ்பெற்ற சுயம்பு சிவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கல்யாணம் ஆகாத, குழந்தை இல்லாத பெண்கள், அம்மனுக்கு வளையல்களை அணிவித்து வேண்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு பூஜை நடைபெறும். திரளான பக்தர்கள் சுயம்பு சிவகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்து அம்மன் அருளை பெறுகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 7, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு 

image

தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை அறிவுத்தலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (WWW.tnpds. gov.in) மூலமாக பொருளில்லா ரேஷன்கார்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News March 7, 2025

5 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 5 வயது மாணவிக்கு, பாலியல் சிண்டல் தந்த முருகன் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் அழைத்துச் செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது, முருகன் தப்ப முயன்றதில் கீழே விழுந்து அவரின் வலது கையில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 7, 2025

ஆங்கிலத் தேர்வில் 598 பேர் ஆப்சென்ட்

image

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 141 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 239 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுத 14,632 மாணவியர், 13,100 மாணவர்கள், 242 தனித் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று (மார்.6) 14,517 மாணவியர், 12,638 மாணவர்கள் மற்றும் 221 தனித்தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 598 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

மாடியிலிருந்து விழுந்து +1 மாணவி உயிரிழப்பு

image

மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீயா பேகம் (16). இவர், வண்டலுார் கிரசன்ட் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று (மார்.6) மதியம் 12:45 மணியளவில், விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

News March 7, 2025

கொலை முயற்சி வழக்கில் ரவுடி படப்பை குணா கைது

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 6, 2025

சர்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

image

காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகில் 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் கட்ட பட்ட காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால் சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் தோறும் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த காளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்து இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!