India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் . இதை SHARE பண்ணுங்க.
செங்கல்பட்டு காவல்துறை சார்பில், வாகன ஓட்டிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எதிர்பாராத விபத்துகளை தவிர்க்கவும், விபத்து நேரிடும் சூழலை தவிர்க்கவும் வாகனங்கள் இடைவெளியுடன் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் உடனே 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாய வள பயிற்றுநருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதற்கு மொபைல் போன் செயலிகளை பயன்படுத்த தெரிந்தால் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.22,500 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். செம்ம வாய்ப்பு ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு காவல்துறையில் கான்ஸ்டபிள், சிறைக் காவலர், போன்ற பணிகளுக்கு 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.18,200-ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் <
செய்யூர் அடுத்த சின்னவெண்மணியில், விளையாடும் போது தவறி வெந்நீரில் விழுந்து 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. லட்சுமணன்(33), சத்தியா (28) தம்பதியில் 3 வயது மகளான தீபிகா கடந்த செப்.11ம் தேதி பசுவுக்கு கஞ்சி காய்ச்ச வைக்கப்பட்டு இருந்த வெந்நீரில், தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தை வைத்துள்ளவர்கள் கவனமாக இருங்கள்.
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் செப்.26ந்தேதி முதல் அக். 26ந்தேதி வரை நெல்லை – செங்கல்பட்டு – நெல்லை இடையே வண்டி எண் (06154 & 06153) வாரம் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமையில் பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று செப்.20 காலை 8 மணிக்கு துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் செப்-19 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து தாம்பரம் மாநகர காவல் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி உட்பட 7 பேரை மீட்டனர். மசாஜ் சென்டர் நடத்திய தினேஷ்குமார் 35, ஜெபின் 26 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
ன்தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் <
Sorry, no posts matched your criteria.