Chengalpattu

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

சத்துணவு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு 

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள் 

News February 9, 2025

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பாதுகாப்பற்ற நெட்வொர்க்குகளில் உங்கள் தரவை ஹேக்கர்கள் எளிதாக இடைமறிக்க முடியும் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. பொது Wi-Fi பயன்படுத்தும்போது வங்கி அல்லது மின்னஞ்சல்கள் போன்ற முக்கியமான கணக்குகளை அனுகுவதைத் தவிர்க்கவும். இதன் மூலம், ஹேக்கர்கள் உங்கள் விவரங்களை திருட முடியும். அதன் மூலம் உங்களிடம் மோசடி செய்ய முடியும். எனவே, எச்சரிக்கையுடன் இருங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2025

விடுமுறை தினத்திலும் திறந்திருக்கும் வண்டலூர் பூங்கா

image

செவ்வாய்க்கிழமை தைப்பூசம் திருநாளை முன்னிட்டு 11ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து இருக்கும் என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை பூங்காவுக்கு விடுமுறை தினமாகும். தைப்பூசம் என்பதால் பார்வையாக அதிகம் பேர் வருவார் என்பதால் பூங்கா திறந்திருக்கும்.

News February 8, 2025

கைதான இருவரும் மாவு கட்டுடன் கோர்ட்டில் ஆஜர்

image

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை அளித்த தயாளன் (45), முத்தமிழ்ச்செல்வன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்றபோது தப்பி ஓடியதால், இருவருக்கும் கால் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரையும் வண்டலூர் மகளிர் போலீசார் நேற்று கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி பிப்.21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

News February 8, 2025

புதிய ஆலையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

image

OMR சாலையில் உள்ள கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனத்தின் புதிய ஆலையை முதல்வர் வரும் 11ஆம் தேதி திறந்து வைக்கிறார்.ரூ.515 கோடி முதலீடு செய்து 446 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. சோப்புகள், முக அழகு க்ரீம்கள், தலைமுடி பராமரிப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தில், 50% பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.

News February 8, 2025

மதுராந்தகம் அருகே அரசு விரைவு பேருந்து விபத்து

image

நாகர்கோவிலிருந்து சென்னை சென்ற அரசு விரைவு பேருந்து, நேற்று முன்தினம் (பிப்.6) மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். பேருந்தில் பயணித்த 12 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுநர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 7, 2025

செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அரிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWSல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 8870578987 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது WHATS APPல் தொடர்பு கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து உங்கள் தகவல்களை பகிரலாம்.

News February 7, 2025

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களுக்கு வேலை

image

செங்கல்பட்டில், மிஷன் சக்தி – ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பெண் விண்ணப்பதார்கள் வரவேற்கப்படுகின்றனர். இளங்கலை பட்டம், முதுகலை பட்டம், டிப்ளமோ, பட்டபப்டிப்பு படித்தவர்கள் இதற்கு வரும் 14ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். மையம் நிர்வாகி, சமூக ஆலோசகர், பாதுகாவலர் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

News February 7, 2025

சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

image

வேலுாரில் இருந்து பூந்தமல்லி நோக்கி, சரக்கு வாகனம் ஒன்று இயந்திரங்கள் ஏற்றிக்கொண்டு ஒரகடம் – ஆப்பூர் சாலை வழியாக, மறைமலைநகர் ஜி.எஸ்.டி., சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை ஹரிஷ் (32), என்பவர் ஓட்டி வந்தார். ஆப்பூர் – மறைமலைநகர் சாலையில் வந்தபோது, வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஹரிஷின் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!