Chengalpattu

News August 12, 2025

செங்கல்பட்டில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற அரசு செயலியிலோ (அ) இந்த <>லிங்கிலோ<<>> உங்கள் விவரம் & தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர்!

News August 12, 2025

செங்கல்பட்டின் பெயர்க்காரணம் தெரியுமா?

image

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது தற்போது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது இப்பகுதி மக்களால் செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொறுப்பு ஏற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வந்த நாராயண சர்மா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பி.ஸ்ரீதேவி இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார். பின்னர், அவர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதேவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News August 11, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 11) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 11, 2025

செங்கல்பட்டு மக்களே! கொஞ்சம் சூதானமா இருங்க…

image

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

செங்கல்பட்டு: M.Ed. படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் (M.Ed.) 300 இடங்கள் உள்ளன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (ஆகஸ்ட் 11) முதல் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20, 2025. ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

News August 11, 2025

செங்கல்பட்டு காவல்துறை விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலி வாடிக்கையாளர் மையங்கள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் வருமானவரி அதிகாரிகள் பெயரில் பணம் பறிக்கும் கும்பல்கள் செயல்படுகின்றன. ‘மிஸ்டுகால்’ அழைப்புகள், முதலீட்டில் இரட்டிப்பு லாபம், பரிசு கூப்பன்கள் எனப் பல்வேறு வழிகளில் மோசடிகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்கள் தனிப்பட்ட தகவல்களையும், பணத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News August 11, 2025

செங்கல்பட்டில் ஆதார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த இணையத்தளத்தில்<<>> இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17368626>>தொடர்ச்சி<<>>

News August 11, 2025

செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை பண்ணிட்டீங்களா?

image

myaadhaar என்ற இணையதளத்திற்கு சென்று Document Update என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். அதற்குள் Click to Submit என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விவரங்களை கொடுங்கள். Address Proof-க்கான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யுங்கள். 2026 ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை இதனை இலவசமாக செய்யலாம். இது கடினமாக இருந்தால் இ-சேவை மையங்களுக்கு சென்றும் செய்து கொள்ளலாம். உங்கள் பகுதியில் உள்ள <>இ-சேவை மையங்கள்.<<>> ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

செங்கல்பட்டு: 10th போதும், ICF-இல் வேலை!

image

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையான ICF-இல் கார்பெண்டர், பெயிண்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட் ஆகியவற்றிற்கு 1,010 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5.30 மணிக்குள் <>இந்த இணையதளத்தின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டில் உள்ளவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!