India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு வள்ளியூரில் 500 ஆண்டுகள் பழமையான ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார். இங்கு வெண்கல ஆஞ்சநேயர், அம்புஜவல்லி தாயார் மற்றும் ஆழ்வார்கள் காட்சி தருகின்றனர். இங்கு தாயாருக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இக்கோவில் செங்கல்பட்டில் இருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்தும் விலகிய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செயலாளர் இரா.மகேந்திரனை சீமான் தரப்பு சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளது. ஆனால் அதை ஏற்காத அவர், “நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன்” என தீர்கமாக தெரிவித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் பேசி வருவதாகவும், விரைவில் இன்னும் சில முக்கிய விக்கெட்டுகள் விழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 5,000 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் பெரிய தெருவை சேர்ந்த டேவிடின் மகள் ஜீவிதா (13), 8-ம் வகுப்பு மாணவி, தாய் வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். விசாரணையில், சிறந்த மாணவியாக இருந்தும் தொடர்ந்து கொரிய வீடியோ கேம்ஸ் விளையாடியதால் மன உளைச்சலில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (18.2.2025) மாலை 3.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் ‘குறை கேட்பு கூட்டம்’ அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மண்டல செயலாளரும், 2019ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற வேட்பாளருமான இரா.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளார். சீமானுக்கு மிக நெருக்கமான தம்பியாக வலம் வந்தவர் இவர். கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் கொன்று புதைக்கப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். 8 தாலுகாக்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில், மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சலாவுதீன் (57). இவர், நேற்று முன்தினம் (பிப்.14) இரவு கரசங்கால் பேருந்து நிறுத்தம் அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த மற்றோரு பைக் அவர் மீது மோதியது. இதில், சலாவுதீன் பலியானார். பைக் ஓட்டி வந்த கரசங்கால் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள், ராகவ் தர்ஷன் (17), யுவராஜ் (17) இருவரும் பலத்த காயமடைந்தனர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.