Chengalpattu

News September 23, 2025

செங்கல்பட்டு: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<> இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News September 23, 2025

செங்கல்பட்டு இளைஞர்களே செப். 27 அன்று மறக்காதீங்க!

image

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (செப். 27) அன்று நடைபெறுகிறது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 044-27426020 தொடர்புகொள்ளலாம். செம்ம வாய்ப்பு வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

செங்கல்பட்டு: ரூ.1.33 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்கள் பறிமுதல்

image

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேற்று (செப்.22) மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ. 1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள, 4 லட்சத்து 31 ஆயிரம் இ-சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இ-சிகரெட்டுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 23, 2025

செங்கல்பட்டு: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப். 23) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது: 1. தாம்பரம்: சேவியர் ஜீசஸ் பள்ளி, 2. திருப்போரூர்: சி.இ.ஆர். பேலஸ், 3. பரங்கிமலை: ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம், 4. காட்டாங்கொளத்தூர்: மலையடி வேண்பாக்கம் அரசுப் பள்ளி, 5. லத்தூர்: பி.வி.ஏ. மஹால், 6. திருக்கழுக்குன்றம்: தத்தனூர் பி.பி.எஸ்.சி. கட்டிடம்

News September 22, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (செப்.22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .

News September 22, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .

News September 22, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News September 22, 2025

தலையில் ஹெல்மெட் அணியுங்கள் – பாதுகாப்பாக இருங்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுரை: தலையை பாதுகாக்க தலையணியை அணிவது ஒவ்வொரு இருசக்கர வாகன ஓட்டுநருக்கும் கட்டாயம். விபத்து நேரங்களில் உயிர் காப்பதில் ஹெல்மெட் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டம் மட்டுமல்ல, உங்கள் பாதுகாப்பும் ஹெல்மெட்டில் உள்ளது. ஆகையால், எப்போதும் தரமான ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள் .

News September 22, 2025

செங்கை: பீர் பாட்டிலால் அடித்து கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, அறையில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதில், பாரதி கண்ணன் என்பவர் உயிரிழந்தார். ராஜன் (28) என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலைக்கான காரணம் குறித்தும், குற்றவாளிகள் குறித்தும் மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 22, 2025

செங்கல்பட்டு: சிட்லபாக்கம் ஏரியில் கிடந்த சடலம்

image

தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பெரிய ஏரியில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிட்லபாக்கம் M.G.R., நகர், பகுதியைச் சேர்ந்த ஏகவள்ளி என்பது தெரியவந்தது.

error: Content is protected !!