Chengalpattu

News March 28, 2024

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். 

News March 28, 2024

செங்கல்பட்டு: வேட்பாளருக்கு இப்படி ஒரு சின்னமா?

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வேட்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,  இன்று வேட்பாளர் விரும்பி கேட்ட சின்னமான டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 28, 2024

பல மாதங்களாக தேங்கி கிடக்கும் வாகனங்கள்

image

நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.

News March 28, 2024

செங்கல்பட்டு: விதிகளை மீறும் அரசியல் கட்சியினர்

image

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

News March 28, 2024

செங்கல்பட்டில் கலை கட்டிய தெருக்கூத்து

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதனை அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

News March 28, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

கூடுவாஞ்சேரியில் இருந்து நேற்று மாலை விக்ரம் என்பவர் தனது காரில் பெருமாட்டுநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நந்திவரம் மலைமேடு சாலை அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் சுவரை இடித்து உடைத்துக்கொண்டு புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரஞ்சித் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2024

தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்

image

புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

செங்கல்பட்டில் துணை ராணுவ அணிவகுப்பு

image

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று (மார்ச்.27) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலநகர் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது. 

News March 27, 2024

டி.ஆர்.பாலு செய்யாத திட்டங்களை நான் செய்வேன்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார். 

News March 27, 2024

செங்கல்பட்டு: சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சரவணன் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

error: Content is protected !!