Chengalpattu

News August 22, 2025

செங்கல்பட்டு: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க் மூலம்<<>> விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த இணையதளம் மூலம் பத்திரம் மட்டுமல்லாமல் நிலம் குறித்த பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற ஆவணங்களையும் எளிதாக பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 22, 2025

செங்கல்பட்டு: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை

image

செங்கல்பட்டு இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து இன்று முதல் செப்.21 வரை விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

தாம்பரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 22, 2025

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை (ஆகஸ்ட் 22) காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். மாவட்ட விவசாயிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

News August 21, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 21) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 21, 2025

செங்கல்பட்டு: லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..

image

செங்கல்பட்டு மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 21, 2025

தாம்பரம்-திருச்சி ரயில் சேவை நீட்டிப்பு

image

திருச்சி – தாம்பரம் – திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06190/91), ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பகல் நேர ரயில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News August 21, 2025

காட்டாங்குளத்தூர்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை செய்யுங்க

image

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

News August 21, 2025

செங்கல்பட்டு: LIC-யில் வேலை, ரூ.1 லட்சம் சம்பளம்!

image

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 – ரூ.1,69,025 சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து செப்.09ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 21, 2025

தாம்பரம்: மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!