India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை அறிவுத்தலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில் தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (WWW.tnpds. gov.in) மூலமாக பொருளில்லா ரேஷன்கார்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 5 வயது மாணவிக்கு, பாலியல் சிண்டல் தந்த முருகன் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் அழைத்துச் செல்ல போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது, முருகன் தப்ப முயன்றதில் கீழே விழுந்து அவரின் வலது கையில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 141 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 239 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எழுத 14,632 மாணவியர், 13,100 மாணவர்கள், 242 தனித் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், நேற்று (மார்.6) 14,517 மாணவியர், 12,638 மாணவர்கள் மற்றும் 221 தனித்தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். 598 பேர் தேர்வு எழுத வரவில்லை.
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த <
மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீயா பேகம் (16). இவர், வண்டலுார் கிரசன்ட் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று (மார்.6) மதியம் 12:45 மணியளவில், விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் மாணவியை, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணா மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகில் 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவர்களால் கட்ட பட்ட காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால் சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் தோறும் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த காளத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்து இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.
ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <
வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தனேஸ் ரெட்டி, ஸ்ரெயர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 2 மாணவர்கள் 1 மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்யூர் அடுத்த மேட்டு நெமிலி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் தனது நேற்று குடிசை வீட்டைப் பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார்.காலை 11: 00 மணிக்கு திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது.வேகமாக பரவிய தீ அருகே இருந்த கஜேந்திரன் என்பவரின் குடிசை வீட்டிலும் பரவியது .தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் இரண்டு குடிசை வீடுகளும் முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.
Sorry, no posts matched your criteria.