Chengalpattu

News January 19, 2026

செங்கல்பட்டு பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

செங்கல்பட்டு: தோழி கண் எதிரேயே ஆண் நண்பர் பலி

image

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). இவர், தனது தோழியான படூரைச் சேர்ந்த திவ்யா (25) என்பவருடன் போரூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்றபோது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார், தனது தோழி கண் எதிரேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 19, 2026

அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

image

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக நாளை(செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் 3 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியப்போட்டி போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பரிசாக ரூ.5,000 வீதம் முதல் 5 பேருக்கும், 2-வது பரிசாக ரூ.3000 வீதம் 5 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.2000 வீதம் 5 பேருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. ஷேர்

News January 19, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

இரவு காவல் பணி ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சி மற்றும் மதுராந்தகம் நகராட்சி, மற்றும் மாமல்லபுரம், ஆகிய பகுதிகளில் தனித்தனி இரவு நேர ரோந்து பணிகள் செய்யும் அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் கைபேசி நம்பர், ஆகியவை அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இன்றுஇன்று 18.01.2026 இரவு நேர காவல் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

செங்கல்பட்டு: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

image

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 18, 2026

செங்கல்பட்டு: 12th, diploma, ITI முடித்தவரா நீங்கள்?

image

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th, டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் வரும் பிப்.04க்குள் விண்ணப்பிக்கலாம். 12th முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

செங்கல்பட்டு: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

செங்கல்பட்டு மக்களே, வேலை தேடும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் UYEGP திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் துவக்க ரூ.15 லட்சம் கடனும் 25% மானியமும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு உள் இருந்து 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். குடும்ப வருமானம் வருடத்திற்கு ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர்.

News January 18, 2026

செங்கையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

செங்கல்பட்டு மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News January 18, 2026

செங்கல்பட்டு: பிடித்த வேலை கிடைக்க இங்கு போங்க!

image

படித்து முடித்த உடனே வேலை கிடைக்க வேண்டும், அதிலும் பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக உள்ளது. தன் திறமை மீது பலருக்கு நம்பிக்கை இருந்தாலும், இறை வழிபாடு மூலமும் நமக்கு நல்லது நடக்கும் என்பது பலரது நம்பிக்கை. அந்த வகையில் நல்ல வேலை கிடைக்க செங்கல்பட்டில் வழி படவேண்டிய கோயில்கள் ✅ அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் சுவாமி கோயில் ✅ திருப்போரூர் கந்தசாமி கோயில். ஷேர் பண்ணிருங்க மக்களே!

error: Content is protected !!