India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து நாளை(ஏப்.29) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
மறைமலை நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா (60). விவசாயியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் மற்றும் பின் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் இவர் தனது வயலில் நீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது செய்யூர் எம்.எல்.ஏ., பனையூர் பாபுவுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ச.அருண்ராஜ் (044-27427412), மாவட்ட எஸ்.பி- சாய் பிரணீத்(044-29540555), மாவட்ட வன அலுவலர்- ரவி மீனா( 044-27236500), மாவட்ட வருவாய் அலுவலர்- கணேஷ்குமார்(044-27427413), கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர்- நாராயண சர்மா(044-71116862), வருவாய் கோட்டாட்சியர், செங்கல்பட்டு- மாலதி ஹெலன்(044-27426492), வ.கோ, தாம்பரம்- முரளி( 044-22410050). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு: இயலாக் குழந்தைகளுக்கு கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் சிகிச்சை தொடர்பான கருவிகள் வாங்க, கனிமவள நிதி 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கலெக்டர் அறிவுறுத்துள்ளார்.
பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் (39) இரு சக்கர வாகனத்தில் காயரம்பேடு நோக்கிச் சென்றார். அப்போது, ஊனமாஞ்சேரியை சேர்ந்த தாமோதரன்(48), தங்கதுரை (65) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றபோது எதிர்பாராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வழங்கும் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வரும் ஜூன் 10ம் தேதிக்குள், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு உரையாடவும் எழுதவும் தெரிந்து இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த லிங்கை <
செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம், கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.