Chengalpattu

News September 24, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News September 23, 2025

செங்கல்பட்டு: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 23, 2025

செங்கல்பட்டு: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News September 23, 2025

செங்கல்பட்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நந்திவரம், மறைமலைநகர் சமுதாயக்கூடம், பெரும்பாக்கம் ஊராட்சி நுண்கண்பாளையம், மதுராந்தகம் நகராட்சி நெல்வாய், திருப்போரூர் வட்டாரம் காயார் ஊராட்சி, காட்டாங்குளத்தூர் வட்டாரம் கால்வாய் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

News September 23, 2025

செங்கல்பட்டு: குறைதீர் கூட்டத்தில் 334 மனுக்கள்

image

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு உதவித் தொகையை ஆட்சியர் தி. சினேகா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், நேர்முக உதவியாளர்கள், தனித்துணை ஆட்சியர், பல துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News September 23, 2025

செங்கை: சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்

image

செங்கல்பட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 2 இளைஞர்கள், 14 மற்றும் 16 வயதுடைய சகோதரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதில் 14 வயது சிறுமி கர்ப்பமானார். பெற்றோர் புகாரின் பேரில், வி.தினேஷ் மற்றும் கே.தினேஷ் ஆகிய 2 இளைஞர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

News September 23, 2025

செங்கல்பட்டு: EB கட்டணத்தை இனி எளிதாக குறைக்கலாம்!

image

செங்கல்பட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்<> ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News September 23, 2025

செங்கல்பட்டு: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

செங்கல்பட்டில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 23, 2025

செங்கல்பட்டு: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

image

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

செங்கல்பட்டில் இனி இது கட்டாயம்..!

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேற்று (22.09.2025) வெளியிடப்பட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் பனை மரத்தை வெட்டுவதற்கு, ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு, ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!