India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா இன்று முதல் ஏப் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலாவும் 5 ஆம் நாளான மார்ச் 31 இல் கருட சேவை, 7 ஆம் நாள் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் காவல் நிலைத்து உட்பட்ட பனையூர் கிராமத்தில் இன்று (மார்ச்-26) நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற பதினோராம் வகுப்பு படிக்கும் பிரவீன் மற்றும் முகமது முசாதிக் ஆகிய 2 பேர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலை கைப்பற்றி செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரான்சில் இயங்கி வரும் திருவள்ளுவர் கலைக்கூடத்தில் வரும் ஏப். 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம், வடகடம்பாடி தனியார் சிற்பக்கூடத்தில் உலோக சிற்ப பிரிவின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் ராஜேந்திரன் வடிவமைத்த 200 கிலோ எடை கொண்ட 4 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் வெண்கல சிலை நேற்று பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பிரபாகரன் நேற்று (மார்ச்-25) (ஸ்ரீபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரவிச்சந்திரன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரேம்குமார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-25) வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்யும் போது முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலுக்கான விழிப்புணர்வு பாடலுக்கான குறுந்தகட்டை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் இன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அவர்
கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.
தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.