India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதனை அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கூடுவாஞ்சேரியில் இருந்து நேற்று மாலை விக்ரம் என்பவர் தனது காரில் பெருமாட்டுநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நந்திவரம் மலைமேடு சாலை அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனை மற்றும் ஹோட்டல் சுவரை இடித்து உடைத்துக்கொண்டு புகுந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ரஞ்சித் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத் நேற்று (மார்ச்.27) நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பை துவக்கி வைத்தார். இந்த அணிவகுப்பு மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாச்சலநகர் என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவு பெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் டி.ஆர்.பாலு மீண்டும் அவர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.டி.ஆர்.பாலு செய்யாத பல திட்டங்களை நான் வெற்றி பெற்றால் செய்வேன் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் இன்று தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூா் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் சரவணன் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால் மிதிவண்டியில் தனது ஆதரவாளர்களுடன் வந்து ஸ்ரீபெரும்புதுார் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்-27) வேட்பு மனு தாக்கல் செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் நாடளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார் எனவே இதில் சேர விருப்பமுள்ளவர்கள் தாம்பரம் ரயில் நிலையம் எதிரே உள்ள ஜீவா வணிக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.