Chengalpattu

News April 9, 2024

வாக்களிக்க வசதியாக 18518 சிறப்பு பேருந்துகள்

image

வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்.17 ,18 ஆம் தேதிகளில் 2970 சிறப்பு பேருந்துகளும், ஏப்.20,21 ஆம் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏப். 16 முதல் 18 வரை முன்பதிவு செய்து செய்து பயணிக்கலாம்.

News April 8, 2024

செங்கல்பட்டு: 2ஆம் கட்ட பயிற்சியில் ஆய்வு

image

2024 மக்களவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

News April 8, 2024

செங்கல்பட்டு அருகே அபாயம்

image

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News April 8, 2024

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

image

தாம்பரத்தில் மெப்ஸ் (MEPZ) என்ற ஐடி வளாகம் உள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால் திருநீர்மலை ஏரி, சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் குடிநீர் குழாயில் நுரையுடன் தண்ணீர் வருகிறது. இதுகுறித்து தாமாக வழக்கு பதிந்த தீர்ப்பாயம் ஜூன் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

News April 8, 2024

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சிக்னலில் இன்று (ஏப்ரல்-8) முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது டாடா ஏசி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த ஸ்ரீதேவி(41) என்பவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

News April 7, 2024

ரூ.4 கோடி பறிமுதல் மூவர் கைது

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்றிரவு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகியோர் கொண்டு சென்ற பைகளில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்டது. இது தற்போது கைப்பற்ற பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

பாஜக ஸ்தாபக தினம் கொண்டாட்டம்

image

பாரதிய ஜனதா கட்சியின் 44 ஆவது ஸ்தாபக தினம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி கொடி ஏற்றப்படவில்லை. இதில் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

இன்று முதல் கோடை விடுமுறை

image

செங்கல்பட்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்.8,10,12 இல் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்தல் பணி காரணமாக ஏப்.15 முதல் ஏப்.21 வரை விடுமுறையும் அதன் பின் ஏப்.22,23 இல் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். அதன் பின் ஏப்.24 முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!