Chengalpattu

News April 26, 2024

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள குழந்தைகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

News April 26, 2024

தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகராத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் ஆவணங்களை சிபிசிஐடியிடம், தாம்பம் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

News April 26, 2024

செங்கல்பட்டு: இளைஞர் தலை நசுங்கி பலி

image

கூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் முரளி(36). இவர் கூவத்தூர் செட்டி தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியதில் முரளி நிலை தடுமாறி விழுந்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 26, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைக்காக வைத்து பூட்டி சீலிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

News April 26, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

செம்பாக்கம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வருகை பதிவேடு, மக்களை தேடி மருத்துவம் அளிக்கப்படும் சிகிச்சைகள்,நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 25, 2024

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

image

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்த வரபிரசாதம் (60) என்பவர் அவரது மனைவி விசுவாசம் (50) நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்தார். இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வரபிரசாதம் மீதான குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 25, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மருந்தகத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பரணிதரன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

சாலையை சீரமைக்க கோரிக்கை 

image

செய்யூர் அருகே தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து விளம்பூர் வழியாக கடப்பாக்கத்திற்கு செல்ல 3.8 கி.மீ., நீள தார்ச்சாலை உள்ளது. சித்தாற்காடு,பாளையூர்,தண்ணீர்பந்தல் அமந்தங்கரணை உள்ளிட்ட கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கடப்பாக்கத்திற்கு சென்றுவர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை சிதிலமடைந்து உள்ளதால் அதனை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 25, 2024

சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

image

அச்சிறுபாக்கம் ஒன்றியம் நெடுங்கல் ஊராட்சி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளை இந்த சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலக்கூடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 25, 2024

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் சிறப்பு

image

பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசுவாமி கோவில். 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவில் சுவரில், கொடை அளித்தவர்கள் பற்றிய விவரம் சிதைந்து காணப்படுகிறது. தாரகாசுரன் என்ற அரக்கனை முருகன் இங்கு வதம் செய்ததாக கூறப்படுகிறது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள், ‘திருப்போரூர் சந்நிதி முறை’ எனப் போற்றப்படுகிறது.

error: Content is protected !!