Chengalpattu

News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம்

image

ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

News June 4, 2024

ஸ்ரீபெரும்புதூர்: தபால் வாக்கு முதல் சுற்று நிலவரம்

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் தபால் வாக்கு முதல் சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக டி.ஆர். பாலு 4072 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து, அதிமுக கூட்டணி 2091 பெற்று இரண்டாமிடமும் , நாதக 892 பெற்று மூன்றாமிடமும், பாஜக கூட்டணி 439 பெற்று நான்காமிடமும் பெற்றுள்ளன.

News June 4, 2024

செங்கல்பட்டு: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

image

18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.

News June 3, 2024

கலைஞரின் பிறந்தநாளை விழா கொண்டாட்டம்

image

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர்.

News June 3, 2024

தாம்பரம்: 1000 பேருக்கு அன்னதானம்

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 – வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். இதில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 3, 2024

செங்கல்பட்டு: திடீர் தீ விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, கிழக்கு கடற்கரை சாலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று திடீரென தீ பற்றியது. இதனால் புதரில் வெயிலில் காய்ந்திருந்த செடிகள் மீது தீப்பிடித்து அருகில் உள்ள பனை மரங்கள் மீது தீ பரவியது. இதில் 150 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. கல்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

News June 3, 2024

செங்கல்பட்டு: மிதமான மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள நகர பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இடி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

News June 2, 2024

அரளி விதை சாப்பிட்டு தற்கொலை

image

செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இருளாண்டி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் நேற்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 2, 2024

ரயிலில் அடிபட்டு ராஜஸ்தான் இளைஞர் பலி

image

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில், நேற்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில இளைஞர் ரயில் மோதி இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாம்பரம் ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாபுராம் (25) என்பது தெரிந்தது.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!