Chengalpattu

News June 11, 2024

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.பி.

image

நாடாளுமன்ற தேர்தல் முடிகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 10, 2024

கேளம்பாக்கம்: பள்ளி வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து

image

கேளம்பாக்கம் ஊராட்சி பள்ளியில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் பங்கேற்று மாணவர்களுக்கு பூங்கொத்து, சாக்லேட் கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

News June 10, 2024

செங்கல்பட்டு: சிறுவன் தவறி விழுந்து பலி

image

ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி.  இவரது மகன் சாய் மதுபாலன்.  கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் காரணை புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு நேற்று பெற்றோருடன் சென்ற சாய் மதுபாலன், வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிய போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

News June 10, 2024

மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு

image

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள துவக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியருக்கு மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி மேளதாளங்களுடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியருக்கு சீருடை புத்தகங்கள் வழங்கினார்.

News June 10, 2024

சாலையில் தேங்கும் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

image

திருப்போரூர் – தாம்பரம், கொளத்துார்-  மேடவாக்கம், புங்கேரி – தாம்பரம், கோவளம் – தாம்பரம், மாமல்லபுரம்-  தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

News June 10, 2024

கூடுவாஞ்சேரி பகுதியில் பாஜகவினர் கொண்டாட்டம்

image

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக மோடி நேற்று இரவு பதவி ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து 71 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்நிலையில் மோடி பதவியேற்பு விழாவை கொண்டாடும் வகையில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் பாஜக நகர தலைவர் முரளிதரன் மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் கலாராணி தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

News June 9, 2024

செங்கல்பட்டு: ஆட்சியர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் தைலாபுரம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதனை, நேற்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது வட்டாட்சியர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News June 8, 2024

குற்றவாளியை கைது செய்யக் கோரி சாலை மறியல் 

image

செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி பகுதியில் தனது வீட்டு வெளியே தூங்கி கொண்டிருந்த யுவராஜ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த நிலையில் யுவராஜை கொலை செய்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் நெம்மேலி பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

News June 8, 2024

மதுராந்தகம்: சார் பதிவாளர் வீட்டில் சோதனை

image

மதுராந்தகம் சார்பதிவாளராக (பொறுப்பு) திலீப்குமார் (40) என்பவர் உள்ளார். கடந்த 6ம் தேதி செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி ரூ1, 50, 000 பணத்தை கைப்பற்றி திலீப்குமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கடலூர் பீச் ரோட்டில் உள்ள திலீப்குமார் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

News June 8, 2024

செங்கல்பட்டு: நள்ளிரவில் வெட்டி படுகொலை

image

செங்கல்பட்டு அருகே நெம்மேலி பகுதியை சேர்ந்த யுவராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். யுவராஜ் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த யுவராஜ் இரவு உணவு அருந்திவிட்டு வீட்டு வாசலில் தனது மகனுடன் படுத்து உறங்கி உள்ளார். மர்ம நபர்கள் யுவராஜை வெட்டி படுகொலை செய்தனர்.

error: Content is protected !!