India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். மார்ச்.22 தினமான நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாணவி ஜெய்மதிபாலா (12) மரகன்றுகளை வழக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.
மார்ச்-22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டில் ஆறாம் வகுப்பு மாணவி மரகன்றுகளை வழக்கி இன்று (மார்ச்-22) விழிப்புணர்வு செய்தார். செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (39), ஜெயபிரதா (38) இவர்களுடைய மகள் ஜெய்மதிபாலா (12) ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனை வரை மிதிவண்டியில் சென்று மரகன்றுகளை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் சோதனை சாவடியில்
குமாரலிங்கம் (28) என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச். 22)பறிமுதல் செய்தனர். அதனை செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கானத்தூர் ரெட்டிகுப்பத்தை சேர்ந்தவர் லோகநாதன்(42) யோகா மாஸ்டர். இவரை கடந்த 13ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது மகன் அஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த தம்பதி சுரேஷ் (38), கஸ்துாரியை (35) விசாரித்ததில் இவர்கள் இருவரும் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிந்தது. இருவரையும் போலீசார் நேற்று(மார்ச்.21) கைது செய்துள்ளனர்.
திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி-1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பம்மல் தெற்கு பகுதிக்குட்பட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா இன்று (மார்ச்-21) நடைபெற்றது. ஆலப்பாக்கம், வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் (மார்ச்.22) நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான முகாம்கள் நாடாளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 14 ஆவது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வந்த 9 மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்களின் சொந்த செலவில் விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்றனர். இதில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் விமானத்தில் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே படாளம் என்ற இடத்தில் கேரளாவில் இருந்து சென்னைக்கு டாரஸ் லாரியில் மரபிளைவுட் ஏற்றிச் சென்ற லாரி இன்று (மார்ச்-20) திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுனர் மற்றும் தீயணைப்பு துறையினர் வாகனத்தின் தீயை அணைத்ததால் பல லட்சம் மதிப்புடைய மர பிளைவுடுகள் தப்பின. இதுகுறித்து படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.