Chengalpattu

News March 29, 2025

ஹீட்டர் போடும்போது கவனம்: உயிரே போய்விடும்

image

மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News March 29, 2025

CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.

News March 29, 2025

11 வழித்தடத்தில் மினி பேருந்து சேவைக்கு ஆணை

image

1.திருவடிசூலம் – பெரிய இரும்பேடு, 2.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் – திருப்போரூர், 3.கொட்டமேடு சாலை சந்திப்பு – முள்ளிப்பாக்கம் சாலை சந்திப்பு, 4.புத்திரன்கோட்டை – கடப்பாக்கம், 5.மதுராந்தகம் பேருந்து நிலையம் – வெளிக்காடு, 6.பெரிய வெளிக்காடு கூட்டுரோடு – பவுஞ்சூர், 7.மதுராந்கம் பேருந்து நிலையம் – கொளம்பாக்கம், 8.ஊனமலை கூட்டுரோடு – மதுார், 9.கொத்திமங்கலம் சாலை சந்திப்பு – சந்தனம்பட்டு.

News March 29, 2025

ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

image

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 28, 2025

போலீசாரை தாக்கிய பிரபல ரவுடி மீது துப்பாகிச்சூடு

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் வனப்பகுதியில் பிரபல ரவுடி அசோக்கை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஆப்பூர் வனப்பகுதியில் சுற்றிவளைத்த போலீசாரை பார்த்து தப்ப முயற்சித்த போது நடத்திய துப்பாகிச்சூட்டில் காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி அசோக் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2025

உடல் நலத்தை மேம்படுத்தும் திருப்போரூர் முருகன்

image

செங்கல்பட்டு, திருப்போரூரில் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் தாரகனுடன் விண்ணில் போரிட்டு ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார் என்பதால் இவ்வூர் திருப்போரூர் என்று பெயர் பெற்றுள்ளது. இக்கோயிலில் வந்து முருகனை வழிபட்டால் செல்வம் பெருகும், உடல் நலம் மேம்படும், காரியத்தடை நீங்கும் என்று பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 28, 2025

செங்கல்பட்டு மக்களே இந்த WEEKEND பிளான் ரெடி

image

செங்கல்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காட்டில் தட்சிணசித்ரா என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலை, கட்டிடக்கலை, கலாச்சாரம், கைவினை மற்றும் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் 18 வீடுகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என தென் மாநிலத்தின் கலை பொருட்களை காணலாம். நுழைவு கட்டணம் ரூ.20- 110 மட்டுமே. விசிட் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 28, 2025

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 30,474 மாணவ, மாணவியர் தயார்

image

10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று (மார்.28) தொடங்கி வரும் ஏப்., 15ஆம் தேதி வரை நடக்கிறது. 10ஆம் வகுப்பு பயிலும் 15 ஆயிரத்து 161 மாணவியர், 15 ஆயிரத்து 313 மாணவர்கள் என மொத்தம் 30,474 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 103 தேர்வு மையங்கள், 9 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் உள்ளன. 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் <>வேலைவாய்ப்ப்பு <<>>ஏற்படுத்தி தரப்படும்.

error: Content is protected !!